“உங்க ஃப்ரண்ட் சரியான சண்டைக்காரன்”, என்று அப்படியே சிவநேசனிடம் சொன்னதை ஒப்பித்து... “கொஞ்சம் எடுத்து சொல்லுங்க”, என்று முடிக்க..
‘ஆஹா... மாப்ளே உன்னை பேச வைக்கிற சாக்குலே.. இந்த பொண்ணை குல்லா போட்டு.. கமிஷினர்கிட்ட ரெகமன்ட் பண்ண வைச்சு. ப்ரமோஷன் வாங்கி சிங்கம் சிங்கம்ன்னு... BGM போட்டு கெத்தா வரணும்’, என்று கலர் கலராக கனவுகள் கண்ட வாசு, நிமிர்ந்த படியே...
“அப்படியா சொன்னான்??”, என்று அதிகாரம் தூள் பறக்க அவளை நோக்கி கேட்க.. அப்பாவியாக அவனைப் பார்த்து தலையை வேக வேகமாக மேலும் கீழுமாக அஞ்சனா ஆட்டி வைக்க... அதைக் கண்ட வாசு மேலும் உசுப்பேறியவனாக..
“எங்க நட்பு சாதாரண நட்பு இல்லை மேடம்! நான் நில்லுன்னா நிப்பான்.. உட்காருன்னு உட்காருவான்! இதெல்லாம் சப்பை மேட்டர்! இந்த பஞ்சாயத்தை வாசு சால்வ் பண்றான்”, என்று என்ன ஏதென்று கேட்காமலே.. தன் நிமிர்த்திய நெஞ்சில் ஓங்கி தட்டி சொல்ல, அதைக் கேட்டதும்
வியப்பில் விழி விரித்த அஞ்சனா அவனைப் பார்த்து,
“பட், அதுக்கு முன்னாலே பப்ளிக்லே பாஸ்வேர்ட்டை சொன்னதுக்கு என்னோட ஸாரியை அவர்கிட்ட முதல்ல சொல்லிடுங்க!!!!”,
என்று வருத்தத்துடன் சொன்னது தான் தாமதம்.. வாசுவின் நிமிர்த்திய நெஞ்சம்.. காத்து போன பலூன் போல சோர்ந்து சுருங்கிப் போனது! பின்னே, இந்த பாஸ்வேர்ட் சம்பவத்தை சொல்லி சொல்லி இரண்டு நாளாக ஆர்யமன் திட்டி தீர்த்து ஒரு காதே செயல் இழந்து விட்டதே!!
எச்சில் விழுங்கிய படி ‘அவளா நீ’, என்பது போல பார்த்த வாசுவிடம்.....
அஞ்சனா உற்சாகமாக...
“கான்ஸ்டபிள் ஸார்! போங்க போய் ஆர்யாகிட்ட ஸ்டார் ம்யூசிக்! ஐ எம் வையிட்டிங்”, என்று கவுண்டமனி காமெடி டோனில் ஆரம்பித்த விஜய் கெத்து டோனில் ஊக்குவித்து விட்டு சைலஜாவுடன் மண்டபத்திற்குள் நுழைய.... அவர்களை மாப்பிள்ளை வீட்டார் தடபுடலாக வரவேற்க...
அப்பொழுது அங்கு வந்த தினேஷ்ஷூம் அவளை பார்த்து விட்டான். அலுவலகத்தினரை ரிசப்ஷனுக்கு மட்டுமே அழைத்திருக்க, அங்கு அவளைக் கண்டதும் வியப்புடன் வரவேற்ற பொழுது....
“ஆரத்திக்கு இன்னும் ஒரு ஆள் வேணுமாம்!” என்று யாரோ அவசர கதியில் அவனிடம் வந்து சொல்லிச் செல்ல....
’இருக்கிறது டென்ஷன்லே! கஹான் கேர்ள் நான் மே தேட ?”, என்று அஞ்சனாவிடம் அலுத்துக் கொள்ள... அவளே, “நான் வேணா உங்க சிஸ்டர் முறைக்கு எடுக்கவா?”, என்று ஆர்வமாக முன் வர.... மகிழ்ச்சியடைந்தவனாக உடன் வருமாறு அழைத்துச் சென்றான்..
அவன் கூட்டி சென்ற அறைக்குள் ஒரே பெண்கள் கூட்டமாக இருக்க... உள்ளே செல்ல தயங்கிய தினேஷ், கமலாவைக் காட்டி அது ஆர்யமனின் அம்மா என்றும் அவரிடம் ஆரத்தி தட்டை வாங்கி கொள்ளுமாறு சொல்லி விட்டு சென்று விட..
உள்ளே வந்து ஆரத்தி தட்டை அவரிடம் வாங்கியவள்... பின்,
“நீங்க ஆர்யாவோட அம்மாவா?”, என்று கேட்டு விட்டு தன்னை அறிமுகம் செய்ய... அவருமே அவள் உரிமையாய் விளித்த ஆர்யாவில் அதிர்ந்து பார்க்க..
அடுத்து அவள் அந்த “சண்டைக்காரன்”, டயலாக்கை அவரிடமும் ஓத.... அவருமே சிவநேசன் போலவே குழம்பிப் போய் பார்க்க.. பின் அவளே,
“ப்ச்.. பரவாயில்லை! ஆர்யா என் கூட பேசலைன்னாலும்... நான் ஆர்யா தாத்தா, ஃப்ரண்ட், அம்மான்னு எல்லார்கிட்டயும் பேசிட்டேன்”, என்றதும்,
“ஆர்யா தாத்தாவா??!!!”, என்று கமலா திகைக்க.. அதைக் கண்ட அஞ்சனா,
“ஆர்யா கூட்டிட்டு வந்தாரே அவர் தான்!”, என்றாள்.. வீல் சேர் என்பதை சொல்லாமல்! தன் கணவனை முதியவன் என்றதும் கமலாவிற்கு வந்ததே கோபம்!!!
“யாரு தாத்தா? அவராலே நடக்க முடியாது அவ்வளவு தான்! மத்த படி யங் தான் என் வீட்டுக்காரர்!!!”, என்றார் கமலா சிறு கண்டிப்பு இழையோட!!!
‘அய்யய்யோ.. அப்போ அது ஆர்யா அப்பாவா! அமுக்குணி ஆர்யா - சொல்லியிருக்க வேண்டியது தானே! இந்த நேரம் அவங்க அப்பா என்னை லூசுன்னுலே நினைச்சிருப்பார்!’, என்று..
அப்படியே தலையில் கை வைத்து...”ஹைய்யோடா.. அங்கிளை தாத்தான்னு சொல்லிட்டேனே”, என்று நொந்தவள் போல பாவனையாக சொல்லி விட்டு பின்.. குறும்பாக அவரைப் பார்த்து..
“ஆன்ட்டி, உங்க ஹஸ்பன்ட் யங்கோ இல்லையோ உங்க லவ் செம யங்!” என்று கண்ணடித்து சிரிக்க... அவள் சொன்னதும் குளிர்ந்து அவள் சிரிப்பில் கலந்தவர் கண்ணில் அவள் வெற்று நெற்றி பெரிய குறையாக பட..
அவளுக்கோ அவர் நெற்றியை நிறைத்த அந்த பெரிய பொட்டு கவனத்தை ஈர்க்க.. “இந்த பெர்பெக்ட் வட்டம் போடுறதுக்கு ஸ்பெஷல் காம்பஸ் வைச்சு இருக்கீங்களா???”, என்று அதைக் காட்டி கேட்க... சிரித்தவர்.. அவளிடம்,