(Reading time: 32 - 63 minutes)

மூக்கு முழியை... விட.. இந்த வாய் இருக்கே வாய்..’, என்று இதழ் தொட சென்ற பார்வையையும்.. ரசிக்க ஆரம்பித்த மனதையும் கடிவாளமிட்டவனுக்கு.. அதை செய்ய நினைத்த தன் மீதே கோபம் வர..

கமலாவைப் பார்த்து,

“அதான் சொல்றேன்ல ஏழரை இழுத்து விடுவான்னு! என் உயிரை எடுக்கன்னே வந்து சேர்ந்திருக்கறவளை பத்தி பேசுறதுன்னா... என்கிட்ட பேசாதீங்க!”,

என்று மற்றவர் எதிர்த்து கேட்க முடியாது தொனியில் வெடுக்கென்று சொல்லி விட்டு இறுக்கமாக அமர்ந்த கொள்ள... அவனை கண்டிக்க கமலா  வாயெடுப்பதற்குள்

அஞ்சனா அருகில் வந்து விட... அவளுக்கு கேட்டு விட்டதோ என்ற கவலையுடன் கமலா அஞ்சனாவைப் பார்க்க....

அவன் சொன்னது இவள் காதில் விழுந்தது தான்.. மனம் காயப்பட்டது என்னவோ உண்மை தான்! ஆனால், கையில் எடுத்த காரியம் நல்லபடியாக செய்ய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்க புன்னகையுடன்...

“எல்லாத்தையும் மறந்திட்டு சந்தோஷமா ஆசிர்வாதம் பண்ணுங்க ஆன்ட்டி! திஸ் இஸ் சோ ப்ரீசியஸ் இல்லையா?”, என்றாள் கண்களால் மாங்கல்யத்தை காட்டி!

அவள் பேச்சு அவர் மனதை தொட்டது! எப்பேர்பட்ட பந்தம் மாங்கலய பந்தம்! கஷ்டமோ.. நஷ்டமோ உடன் வரும் சொந்தம்! அதை தொட்டு கண்களில் ஒற்றி விட்டு கையில் அட்சதையை எடுத்துக் கொண்டவராக...

“இது எனக்கு மட்டும் சொல்லலை தானே!”, என்று ஆர்யமனை பார்த்த படி அவளிடம் கேட்க..

“ஆஹான்!!! சரியா சொன்னீங்க!! ”, ஒரு கரத்தில் தட்டை பிடித்து மறு கையால் அவருக்கு ஹை ஃபை கொடுக்க..

அவள் சொன்னதுமே...

‘தீதி லைஃப் நல்லா அமையணும்’, மனதார எண்ணிக் கொண்டாலும்... இந்த திடீர் கூட்டணியில் சற்றே மிரண்டு சிவநேசனைப் பார்க்க...

அவரோ, ‘இனி ஒன்னும் சொல்றதுக்கு இல்லை’, என்பது போல அவனைப் பரிதாபமாகப் பார்க்க.. இந்த கேப்பில்...

‘மாப்ளே கொஞ்சம் கெத்தை குறைச்சு அப்படியே நண்பன் ப்ரமோஷனுக்கு ரெகமன்ட் பண்ணுடா’, என்று வாசு அவன்  காதை கடிக்க.... அவனை முறைக்க திரும்பிய யத்தனித்த பொழுது அட்சதை தட்டை அஞ்சனா நீட்ட...

எதிரே இருந்த மாங்கல்யத்தை தொட்டு ஆத்மார்த்தத்துடன் கண்களில் ஒற்றிக் கொண்டவனை திருப்தியுடன் பார்த்தவளுக்கு தெரியுமா  திருப்தியின்றி அதை அவனிடம் ஏற்றுக் கொள்ளும் நாள் வரும் என்று!

நான்! நிலம்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.