"டேய் கண்ணா!"-ஜானகியின் குரல் கேட்டதும் கண்ணீரை துடைத்துக் கொண்டான் ஆதித்யா.நதியின் சலசலப்பு அவனை நிஜ உலகிற்கு அழைத்து வந்தது.
"என்ன அம்மூ?"
"என்னடா கண் கலங்கி இருக்கு?"
"அது..."
"என்ன ஆச்சு?"
"நான்..கேம் விளையாடிட்டு இருந்தேன்!"
"கேமா?"
"ம்..கண்ணை இமைக்காம வச்சிட்டு இருப்பாங்கல்ல அதான்..நீயும் பண்ணி பாரேன் உனக்கும் தண்ணீர் வரும்!"-ஜானகி அவன் தலையில் செல்லமாக குட்டினார்.
"ஏற்கனவே அந்தப் பாழாப் போன கம்யூட்டர் முன்னாடி மணிக்கணக்காய் உட்கார்ந்து தொலைக்கிற!இதுல,இது வேறயா?சீக்கிரம் சோடாப்புட்டி தான் போ!"-என்று அவனது செவிகளை அவனுக்கு வலிக்காதப்படி திருகினார்.
"ஆ..அம்மூ வலிக்குது!"
"நடிக்காதே!நீ என்ன பண்ற நேரா யாத்ராவை கூட்டிட்டு வெளியே போற,போய் மளிகை சாமான் வாங்கிட்டு வர,எல்லாம் காலியாடுச்சு!மணி வேற உடம்பு முடியாம இருக்கான்.அதான் உன்னை அனுப்புறேன்!"
"மளிகை சாமானா?"
"ம்..பின்ன யாத்ரா மட்டும் தனியா போவாளா?"
"ஏன் போகட்டுமே!"
"டேய்!ஊருக்கு வந்ததில் இருந்து உங்களுக்கு ஃப்ரைவசியே கிடைக்ககலைன்னு சொன்னேன்!"
"ஐயோ..இப்படி ஒரு அம்மா எத்தனை பேருக்கு கிடைப்பாங்க?"
"எல்லாம் உங்க மேல இருக்கிற நம்பிக்கை தான்!போயிட்டு வாங்க!"-புன்னகைத்தப்படி சென்றுவிட்டார் ஜானகி.
15 நிமிடங்கள் கழித்து...
காரில் இருவரும் அமைதியாக பயணம் மேற்கொண்டனர்.
சில தொலைவுகள் சென்றதும் காரை நிறுத்தினான் ஆதித்யா.யாத்ரா என்ன என்பதாய் அவனை பார்த்தாள்.
அவன் அவளை நோக்கி தன் இரு கரங்களையும் விரித்து காண்பித்தான்.
"இது வீடில்லை..!"
"ப்ச்.."-என்று அவன் கண்களால் அவளை அழைக்க அவனுக்கு கட்டுப்பட்டவளாய் அவனது நெஞ்சினில் சாய்ந்துக் கொண்டாள் யாத்ரா.அவனது கரங்கள் அவனை வளைத்துக்கொள்ள,மனதினில் என்றுமே இல்லாத ஒரு நிம்மதி அவனுக்காய்..!!
தொடரும்
{kunena_discuss:969}