(Reading time: 13 - 25 minutes)

ரிப்பா .. குட் நைட் மா, குட் நைட் பா..”

“குட் நைட் செல்லம்..”

தன் அறைக்கு சென்றவளுக்கு, ஏனோ அர்ஜுனின் முகம் கண் முன் வந்தது.. அது என்னவோ எல்லோரையும் கலாயித்தாலும், அர்ஜுனை கலாயிக்கும்போது மட்டும் தனி சந்தோஷம்.. ஆனால் அவள் அதற்கு மேல் அதை பற்றி யோசிக்கவில்லை.

ட்ரெயினில் போகும்போது நிஷா தன் அப்பாவிடம்,

“அப்பா.. நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்..”

“சொல்லுமா. “

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

அவரிடம் ராகுல் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக சொல்ல , அவள் அப்பா யோசித்து கொண்டிருந்தார்.. பிறகு ராகுல் குடும்பம் பற்றி கேட்டவர்,

“உனக்கு அவர பிடிச்சு இருக்காமா?”

“பிடிச்சு இருக்குப்பா.. “

“அப்போ அவங்க வீட்டில் இருந்து பேச வருவாங்களா? இல்லை நாம போகனுமா ?”

“உங்களுக்கு சம்மதமா அப்பா..”

“நீ ஒரு வருஷமா அவர் கூட பழகி இருக்க. அவரை பத்தி உனக்கு என்ன தோனுதும்மா..?”

“நல்லவர் தானப்பா.. ஒரு அதிகாரியா அவர் கூட பழகினாலும், எல்லோரையும் மதிப்போட நடத்துவார்பா.. வேலை தப்பு பண்ணினால் திட்டுவாங்க. .அதுக்காக அதயே வச்சு பேச மாட்டாங்க.. திறமைய மதிப்பாங்க.. “

“உனக்கு இவ்ளோ தெரியும்போது, உனக்கு மறுப்பும் இல்லை எனும்போது எங்களுக்கும் ஒன்னும் பிரச்சினை இல்லை.. நாங்களே உன் வேலை பற்றி புரிந்த மாப்பிள்ளை எப்படி பார்ப்பது என்று யோசித்து கொண்டு இருந்தோம்.. இப்போ உன் துறைலேயே அவர் இருக்காரு என்பது நல்ல விஷயம் தானே.. “

“தேங்க்ஸ் ப்பா.. ரொம்ப சந்தோசம்.. நான் இன்னிக்கு மாலை .. சுராவ கூட்டிட்டு அவர போய் பார்த்துட்டு வந்தேன்ப்பா..”

“ஏன்மா. நீ இப்படி செய்யலாமா.. அவங்க அப்பா , அம்மா என்ன நினைப்பாங்க.. உன் காதலுக்கு அவங்க பொண்ணு ஏன் துணை போகணும் நினைக்க மாட்டாங்களா..?”

“அவங்க அப்படி எல்லாம் நினைக்க மாட்டாங்க.. நானும் சுறா கிட்ட, இன்னிக்கே அவங்க கிட்ட சொல்ல சொல்லிட்டேன்.. “

“இருந்தாலும் இப்படி செய்யறது தப்பும்மா..”

“அது வந்துப்பா.. நாம இன்னிக்கு கிளம்பறோம்னு.. அவங்க கிட்ட சொல்ல தான்ப்பா போனேன். “

“ஏன் நீ முன்னாடி சொல்லலையா..?”

“அவங்க இந்த ட்ரைன்லே வரும்போதுதான் கேட்டாங்க.. நானும் கொஞ்சம் யோசிச்சுட்டு அப்புறம் உங்க கிட்ட பேசறேன்னு சொன்னேன்..”

“சரிம்மா.. இப்போ என்ன பண்ண போறீங்க.. ?”

“அப்பா .. அது வந்து ..” என்று தயங்கியவள் “ராகுல்க்கு இப்போ காஷ்மீர் போஸ்டிங் போட்ட்ருக்காங்க.. அது ஹை அலெர்ட் ஏரியா என்பதால பாமிலி அனுமதிப்பங்களா தெரியாது.. அதோட எனக்கும் first போஸ்டிங் அங்கே கொடுக்க மாட்டங்க.. அதுனாலே மூணு வருஷம் கழிச்சு கல்யாணம் செய்துக்கலாம்னு சொல்றாங்க பா.”

“ஏனம்மா.. அப்பா இப்படி கேட்கறேன்னு தப்பா நினைக்காத.. காஷ்மீர்லே போஸ்டிங்ன்னா, ரிஸ்க் இல்லையா.. எந்த நம்பிக்கையில் மூணு வருஷம் காத்து இருக்கிறது..?”

“இல்லைப்பா எனக்கு நம்பிக்கை இருக்குபா.. நீங்க இந்த மூணு வருஷம் கல்யாண பேச்சு வந்தால் சமாளிச்சுக்குங்க.. ப்ளீஸ்.. “

“ஹ்ம்ம். .சரிம்மா.. மூணு வருஷம் வரை நிச்சயம் காத்து இருக்கோம்.. நல்லதே நடக்கும்னு நம்புவோம்...”

“ரொம்ப தேங்க்ஸ் பா..” என்ற நிஷா அந்த சந்தோஷத்தோடு படுத்து விட்டாள்.

ராகுல் வீட்டிற்கு சென்ற அர்ஜுன், மிதுன் இருவரிடமும் பேசிக் கொண்டிருந்த ராகுல் அம்மா.. கொஞ்ச நேரத்தில்

“ஏண்டா.. அர்ஜுன்.. உன் friend என்ன மந்திரிச்சு விட்ட மாதிரி இருக்கான்..? “

ஏதோ யோசனையில் இருந்த ராகுலை அர்ஜுன் உலுக்க, முழித்தவன் பிறகு தன் அம்மாவை பார்த்து

“மனுஷன் பீலிங் தெரியுதா உங்களுக்கு?”

“அப்படி என்னடா புடலங்கா பீலிங்.. ?”

“என்னோட பீலிங் உனக்கு புடலங்கா வா..?”

“அப்புறம் வேற என்ன..?”

“நானே என் ஆளு ஊருக்கு போயிருக்காளே.. அதோட அவங்க வீட்லே வேற இன்னிக்கே சொல்ல போறேன்னு சொன்னத பத்தி யோச்சிட்டு இருக்கேன்.. “ என புலம்ப,

அவன் அம்மாவோ அவனை விசித்திரமாக பார்த்தாள்..

“டேய் அர்ஜுன்.. இவன் சொல்றது உண்மையா..?”

“ஆமாம்..மா.. அவன் ஒரு பொண்ண லவ் பண்றான்.. என்னனு கேளுங்க.. ?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.