போடா உன் ஆஸ்தி எனக்கு வேண்டாம் என்று தன் கண்களில் புறக்கணித்து திரும்பி ரோட்டை பார்த்தாள் .
உன் வாயாலே என் பேர்சொன்னால்
உன் காலடியில் கிடப்பேன் !
அதன் பின் வரும் வரிகளை சத்தமாக ரெடியோவினுடன் சேர்ந்து பாடினான் மஹிந்தன் .
தூக்கத்தை தொலைத்தேனே ,துடிக்குது நெஞ்சம்!
தலை போன சேவல்போல் தவிக்குது அங்கம்!
இரண்டில் ஒன்றை சொல்லிவிடு
இல்லை நீயே கொள்ளியிடு .
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ப்ரீத்தியின் "அடையாளம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
அவன் பாடியது பிடிக்காமல் தன் காதை பொத்திக்கொண்டு முதலில் இந்த பாட்டை நிப்பாட்டுங்கள் என்று கத்தினாள்.
அவள் அப்படி சொன்னதும் சத்தத்தை குறைத்து வைத்து அதில் வரும் வரிகளை மாற்றி ரெடியாவைவிட சத்தமாக அதனுடன் பாடினான்.
நோகாமல் பிறர் பார்த்தாலும் [பிறர் பாராமல் ]
உந்தன் ஆடை நுனி தொடுவேன் .
என்ன ஆனாலும் உயிர் போனாலும்
ஒரு புயல் போல் வருவேன் [தென்றல் என் வருவேன்]
அவனின் திரிந்த பாடல் வரிகலில் பயத்துடன் அவள் பார்த்ததை பார்த்த மஹிந்தன் தன் குரலை தனித்து, குலைத்து ரேடியோவுடன் மென்மையாக பாடினான் .
நீ என்னை பார்த்தாலே துடிக்குது உள்ளம் ,
நீ எனை பிரிந்தாலே உள்ளம் வெறும் பள்ளம் ,
இமயம் கேட்கும் என் துடிப்பு ,ஏனே அவளுள் கதவடைப்பு .
அவனின் உருகி வடிந்த குரலின் இனிமையில், இவனுக்கு இவ்வளவு உருக்கமாகக் கூட தன் மனதில் உள்ளதை சொல்ல தெரியுமா? என்ற ஆச்சரியம் வந்தது. கவிழையாவிற்கு.
அதற்கு பின் எதுவும் பேசாமல் கார் கவிழையாவின் வீட்டிடை நோக்கிச் சென்றது .மகிந்தனுக்கு அவள் தன் அருகில் இருப்பதே அப்பொழுது போதுமானதாக இருந்தது .
அவள் வீட்டின் வாசலில் அவளை இறக்கிவிட மனமே இல்லாமல் காரை நிறுத்தினான் மஹிந்தன் இறங்க போனவளின் கைபிடித்து ப்ளீஸ் பேபி என்று கூறி கையில் முத்தமிட்டு கதவை திறந்து விட்டான்.
ஏனோ ழையாவால் அம்முத்தத்தை மறுக்க முடியவில்லை . கார் கதவு திறந்ததும் எதில் இருந்தோ தப்பிப்பது போல் வீட்டிற்குள் ஓடி மறைந்தாள் .
தொடரும்
{kunena_discuss:1081}