“கையை விடுங்க…”
“நீ சொல்லு… நான் விடறேன்…”
“சொல்லுறதுக்கு எதுவுமே இல்லன்னு தான சொல்லுறேன்…”
“அது பொய்ன்னு தான் நானும் சொல்லுறேன்…”
அவன் அழுத்தம் திருத்தமாக கூற, அவள் சில கணங்கள் அமைதியானாள்…
“நமக்குள்ள இவ்வளவு பெரிய பிளவு வர காரணம் என்ன?...”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்..
“அது….”
“சொல்லுங்க… என்ன காரணம்?...”
“உங்கிட்ட ஒரு குழந்தை கேட்டு நான் டார்ச்சர் பண்ணது தான்…”
குற்ற உணர்ச்சியுடன் அவன் தயங்கியபடி கூற,
“அதுக்கு நான் மறுத்தது தான உங்க கோபத்துக்கும் ஆத்திரக்கும் காரணம்?...”
“ஆமா…”
“அது ஏன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா?...”
அவள் கவலையோடு கேட்க, அவன் அவளையேப் பார்த்தான்…
“சொல்லுங்க… யோசிச்சிருக்கீங்களா?...”
“…………….”
“ஒரு நாள், ஒரு பொழுதாவது ஆர அமர உட்கார்ந்து யோசிச்சிருப்பீங்களா?...”
“………………”
“இல்ல தான திலீப்?...”
“அடுத்தும் பொண்ணா பொறந்துட்டா, என் வெறுப்பு அதிகமா ஆகிடும்னு மறுத்திட்ட சரயூ…”
அவனின் பதில் கேட்டு அவள் சிரித்தாள் சத்தமாக…
அவளின் சிரிப்பு அவனுக்கு திகைப்பை உண்டு பண்ண,
“ஏன் சிரிக்குற சரயூ?...”
“நீங்க சொன்னது காரணம் இல்ல……”
“அப்போ வேறென்ன?...”
“வேற என்னன்னு உங்களுக்கு நிஜமாவே தெரியாதுன்னும் எனக்கு தெரியும் திலீப்…”
அவள் இதழ்கள் மீண்டும் லேசாய் வளைய, அவன் நெற்றியின் மத்தியில் முடிச்சு ஒன்று விழுந்தது….
“சரி சரயூ… எனக்கு தெரியலை… நான் ஒத்துக்குறேன்… நீயே சொல்லு அதை…”
“……………………”
“சொல்லு சரயூ.. ப்ளீஸ்… சொல்லு… உனக்குள்ள வச்சி ஏன் உன்னையே வதைச்சிக்குற?... சொல்லிடுடி… சொல்லு இப்பவே…”
“……………………..”
“சொல்லுன்னு சொல்லுறேன்ல….”
“…………………”
“என் மேல சத்தியம்… இப்பவே நீ சொல்லணும்… மறைக்காம…”
“திலீப்…………………………..!!!!!!!!!!!!!!!!!!!!”
“சொல்லு சரயூ… சொல்லு… நீ சொல்லாம போனா, நிச்சயம் எனக்கு எதாவது ஆகிடும்… ஏன் இன்னைக்கே கூட போகும்போது ஆக்சிடெண்ட்…………………….”
அவன் சொல்லிக்கூட முடிக்கவில்லை,
“அய்யோ நல்ல நாள் அதுவுமா என்ன வார்த்தை சொல்லுறீங்க?... ப்ளீஸ்… நிறுத்துங்க…” என அவன் வாயைப் பொத்தி அவள் சொல்ல,
“அப்போ சொல்லு…” என அவனும் விடாப்பிடியாய் கேட்க,
“நீங்க தான்…………………………………….” என்றாள் அவள் உரக்க…
அவன் அதிர்ச்சியுடன், அவளைப் பார்க்க, முகம் மூடி தரையில் சரிந்தாள் அவள், பலத்த அழுகையுடன்….
தொடரும்
{kunena_discuss:995}