(Reading time: 31 - 62 minutes)

ப்ப வந்தீங்கல்ல….ஏன் திடீர்னு உங்களுக்கு அப்டி தோணிச்சு…… ஐ மீன்…..கண்மணி சொன்னாங்க….. அதுவரைக்கும் உங்களுக்கு மேரேஜ் பத்தி ஐடியாவே கிடையாதுன்னும் சொன்னாங்க…” பேச வேண்டும் என கொஞ்சம் வேகமாக ஆரம்பித்தவள்….அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பீட் குறஞ்சு நின்றுவிட்டாள்…

‘ஆக அப்ப கூட உன்ன எனக்கு பிடிக்கும்னு என்ன சொல்ல வைக்கதான் இவ்ளவு எஃபெர்ட்டா ஜி கே…… என கொஞ்சம் அசந்து கொண்ட விவன்….

இப்போது அவளிடம் தெளிவாகவே பேசிவிட முடிவெடுத்தான்….. அவள் கண்மணி சொன்னாள் என குறிப்பிட்டது இதற்கு முக்கிய காரணம்.

என்னதான் கண்மணி இவனுக்கு மிக முக்கியமான உறவாய் இருந்தாலும் இவன் மனைவி இவனை இவன் வழியாக புரிந்து கொள்வதே சரியாக இருக்கும்…

“ரியு உன்ட்ட கொஞ்சம் டீடெய்லா பேசனும்…” என்ற அவன் வார்த்தைகளில் வந்திருந்த ஒரு வித தீர்க்கம்…. அவன் பார்வையை தவிர்க்க செய்துகொண்டிருந்த பாவையை நிமிர்ந்து பார்க்க வைத்தது….

“ கண்மணி  பத்தி சொல்லி இருக்கேன்ல….. பெரியப்பா பெரியம்மால்லாம் என்னதான் நல்லா பார்த்துகிட்டாங்கன்னா கூட இவளால அவங்கட்ட சேர முடியாம ரொம்ப ஹர்ட் ஆவா….” என தொடங்கினான் விவன்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

இதுக்கும் இவளோட கேள்விக்கும் என்ன லிங்க்னே புரியலைனாலும்….அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை புரிந்து கொள்ள முயன்றாள் ரியா….

“என்ன இருந்தலும் அது நம்ம வீடு இல்லைனு ஒரு fact இருக்குதில்லையா…..அதுல அவளுக்கு ரொம்ப இஷ்யூ ஆகும்….

ஃபார் எக்‌சாம்பிள்….பெரியம்மாவுக்கு அன்னைக்கு ரொம்ப வீட்டு வேலை..…. எல்லாம் என் நேரம் இப்டி கிடந்து இழுபட வேண்டி இருக்குன்னு அவங்க முடியாம புலம்புனாங்கன்னு வை…. நிமு அப்டியே சுருண்டுறுவா…என்னமோ எங்களத்தான் அவங்க திட்றாங்கன்னு அவளுக்கு தோணும்…

உண்மையில் என் அம்மா இருந்திருந்தா கூட அந்த சிச்சுவேஷன்ல அதையே சொல்லி இருப்பாங்களா இருக்கும்….அப்டின்னுல்லாம் அவளால யோசிக்க முடியாது….

இப்படி ஒவ்வொன்னையும் டே ஒன்ல இருந்து யோசிச்சுகிட்டு ரொம்பவும் அப்செட் ஆகி….அவங்க வீட்ல சரியா சாப்ட கூட செய்யாம அப்டி கஷ்டபடுவா நிமு….அதுவும் எதையும் அங்க யார்ட்டயும் காமிச்சுக்கவும் மாட்டா…..அவங்க ஹர்ட் ஆக கூடாதுன்னு அதுக்கும் கவலைப் படுவா…..

ஆனா எல்லாத்தையும் என்ட்ட வந்து தனியா சொல்லி அழுவா…..

எப்பவும் எங்க வீட்ல பெரியப்பா வீட்டைவிட ஃபெஸிலிட்டி அதிகம்…… அப்ப எங்க வீட்ல ஏசி வாட்டர் ஹீட்டர்னு எல்லாம் இருக்கும்…. பெரியப்பா வீட்ல அதெல்லாம் இருக்காது…..சோ இவ அதை காரணம் காமிச்சு எங்க வீட்லயே தங்கிப்பா….அவளுக்கு துணைக்கு நான் கூட இருக்கனும்……

அப்டி ஆராம்பிச்சு….அடுத்து அங்க சாப்டாம இவ படுற பாடை பார்த்துட்டு……. முதல்ல ஸ்நாக்ஸ்‌ அது இதுன்னு வாங்கி கொடுப்பேன்….அப்படியே எவ்ளவு நாள் இருக்க முடியும்…. எங்க வீட்ல கொஞ்சம் கொஞ்சமா நான் எதாவது செய்து கொடுக்க ஆரம்பிச்சு…. நிமு ஒருமாதிரி என் கைக்குள்ளயே இருந்துட்டா….. ரெண்டு வீடாவே எங்க வீடு ரன் ஆகுற மாதிரி ஆகிட்டு“ அவன் சொல்லிக் கொண்டு போக…. கண்மணியின் மாமியார் சுடர் ஆன்டி விவன் கண்மணியை வளர்த்ததாக ஏன் சொல்கிறார் என்பது ரியாவுக்கு புரிந்தது போல் இருக்கிறது….

“இதெல்லாம் பெரியப்பா பெரியம்மாவுக்கு கண்டிப்பா கஷ்டமா இருந்திருக்கும்…..” விவன் இன்னுமாய் தொடர்ந்தவன்……

“ஆனா அவ ரொம்ப குட்டிப் பொண்ணு இல்லையா….அந்த ஏஜ்லயே அவளுக்கு பேரெண்ட்ஸ் இல்லைன்றதால முடிஞ்சவரை அவளை பேம்பர் செய்வாங்க……எதுக்காகவும் அவட்ட மூஞ்ச தூக்க மாட்டாங்க…. இவ அதுக்கும்  ஃபீல் பண்ணுவா….பாரு அக்காட்டன்னா எப்டி ஸ்ட்ரிக்ட்டா இருக்காங்க……நான் யாரோதானன்னு….

இதுக்காகல்லாம் நிமுவ மோசம்னு யோசிச்சுடாத ரியு…..” சட்டென விவன் இப்போது சற்று தவிப்பாய் இவள் முகம் பார்க்க…

இடமும் வலமுமாய் தலையாட்டி தன் மறுப்பை தெரிவித்தாள் ரியா…..அவள் கண்ணில் கண்ட தாய்மையும் முகத்திலிருந்த நிறைவின் புன்னகையும் விவனுக்கு போதுமானதாய் இருக்க….

“கண்மணி இப்ப இப்படில்லாம் இல்ல….அவங்க ரொம்பவே ஸ்வீட் டைப்…. குழந்தையா இருந்தப்ப இப்டி இருந்திருந்தாங்கன்னா கூட அது காயம்பட்ட ஒரு குழந்தை வலிய வெளிப்படுத்ற விதம்….வளர்றப்ப அத புரிஞ்சு அவங்க மாத்திக்கிட்டது அவங்க மெச்சுரிட்டிய காண்பிக்குது…” என வார்த்தையில் வேறு தன் மனதை தெரிவித்தாள் இவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.