அடுத்து வெளியே என்ன நடந்தது என்றெல்லாம் தெரியாது…… சற்று நேரம் கழித்து ரூம் கதவு தட்டப்படும் சத்தம்….
இவளுக்குப் போய் கதவை திறக்கும் மனநிலை கூட இல்லை…. விவனைப் பார்க்க பார்க்க அவன் இவளுக்கு இல்லை என்பது இன்னும் இன்னுமாய் வலிக்கும்…… ஆக படுக்கையில் விழுந்தே கிடந்தாள்…..
“ரியு…..!!
“ரியு என்ன பண்ற நீ…?”
“கதவ திற….”
“ப்ச்….இப்ப எதுக்கு நீ இவ்ளவு ஃபீல் பண்ற….?” என்றபடி சற்று நேரம் தட்டிப் பார்த்த விவன்…..
“இப்ப மட்டும் நீ கதவ திறக்கலையோ….இந்த வீட்ல ஒரு கதவுக்கும் இனி பூட்டு இருக்காது” எனும் போது இவள் கதவை திறந்திருந்தாள்…..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - சமூக அக்கறையுள்ள குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
அவன் வகையில் அவள் மனோதிடம் அவ்ளவுதான்…
சட்டென கதவைத் திறந்தவள் அவன் எதுவும் சொல்லும் முன்னும் “இப்ப என்ன வேணும்?” என கேட்டும் வைத்தாள்….நிச்சயமாய் ஹார்ட் வாய்ஸ்தான்… ஸ்டெர்ன் டோன் தான்…..
“நீ என் கண்ணுக்குள்ளே இருக்கனும் போல இருக்கு ரியு….இல்லனா கஷ்டமா இருக்கு…” எதையும் யோசிக்காமல் மனதிலிருந்ததை அப்படியே சொல்லி வைத்தான் அவன்…
இனி அவட்ட மறைக்க என்ன இருக்கிறதாம் என்பது அவனுக்கு…. எப்ப அவ காதலை அவ ரியலைஸ் செய்துட்டாளோ….இனி இவங்க ரெண்டு பேருக்கும் இடையில் இடைவெளி எதற்காம்?
கேட்டிருந்த ரியாவுக்கும்தான் எப்படி இருக்கிறதாம்…..? அதுவும் அவன் முகத்தைத்தானே அவள் பார்த்திருக்கிறாள்…..அதன் ஒவ்வொரு செல்லிலும்…அவன் கண்ணிலும் குரலிலும்….இருப்பதென்ன….? இந்த கனிவும் தவிப்பும் காதலாய் இல்லாமல் போனதென்ன?
அனாதை, வெறும் இரக்கம்னு சொல்லிட்டியேடா!!!!
ஒரு புறம் உருகி மறு புறம் இறுகினாள் இவள்…. அவ புரிஞ்சுகிட்ட ரேஞ்ச் அது…
‘சரி போ…..நீ என் மேல இரக்கமே பட்டுக்கோ…..நான் உன்ன லவ் பண்றதாவே இருக்கட்டும்….’ ஒரு மாதிரி தன் மனதை தேத்திக் கொண்டவள்….
“கொஞ்சம் ஒருமாதிரி இருக்குப்பா… “ என மட்டும் விளக்கம் கொடுத்தாள் விவனுக்கு….
இப்போது கை நீட்டி அவள் கையைப் பற்றியவன்….அந்த ரூமிற்குள்ளாகவே நடத்திப் போய் அங்கிருந்த பெட்டில் தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டான்…
எதையும் மறுக்கவும் தோன்றவில்லை இவளுக்கு…
“ஏன் ரியுமா…..இதெல்லாம் ஏற்கனவே தெரிஞ்ச விஷயம்தான….? இப்ப எதுக்கு வருத்தப்படுற….? இதெல்லாம் எப்படி நடந்துச்சுன்னு தெரிஞ்சாகனும் இல்லையா…..? உன்னை யாரோ எதுக்காகவோ டார்கட் செய்றாங்களோன்னு இருந்துச்சுமா…அதான் ஆதிரன் சார்ட்ட ஹெல்ப் கேட்டிறுந்தேன்…” இந்த ரெஜிஸ்ட்ரேஷன் குளறுபடிக்கான இன்வெஸ்டிகேஷனைப் பத்தி குறிப்பிட்டான் அவன்…
அதுமட்டுமா விஷயம் இவளுக்கு…? இன்ஃபேக்ட் அதுவா விஷயம் இவளுக்கு…..? ஆனாலும் இப்ப இவன்ட்ட அவ என்ன சொல்லனும்?
“ம்…. “ என்றவள்….” அப்ப ப்ரெக்னென்சி விஷயமும் ஆதிரன் அங்கிள்க்கு தெரியுமோ…?” என சுரத்தில்லாமல் கேட்டாள்… அவளை படுத்திக் கொண்டிருக்கும் மற்றுமொரு விஷயம் அது…..
“சே…. சே…அதுக்கா இவ்ளவு அப்செட்…? அதெல்லாம் யார்ட்டயும் சொல்ல மாட்டேன்னு சொல்லி இருக்கேன்ல…. இப்டி மேரேஜ்க்காக நீ ரெஜிஸ்ட்டர் ஆஃபீஸ் போனப்ப நம்ம மேரேஜ் ஏற்கனவே ரெஜிஸ்ட்டர் ஆகி இருந்துது….அது எப்டின்னு பார்த்து சொல்லுங்கன்னு மட்டும் கேட்ருந்தேன் ரியுமா….. அதோட அந்த செயின் விஷயம்…. அவ்ளவுதான் சொல்லி இருக்கேன்…..ஓகேவா…? ஆதிரன் சார் இப்ப எதுக்கு அந்த நாய் நாதனை இங்க கூட்டிட்டு வந்தார் தெரியுமா…. இன்னைக்கு கண்டதும் காதல்னு மேரேஜ் செய்துட்டமாம்..….நாளைப் பின்ன……எதாவது ஒரு சூழ்நிலையில நான் தான் உன் வெட்டிங்க நிறுத்திட்டேன்னு உனக்கோ இல்ல நீ எதுவும் செய்து என்னை மேரேஜ் செய்துட்டன்னு எனக்கோ தோணிட கூடாதாம்….. பாரு ஆதிரன் சார்க்கு மத்த விஷயமெல்லாம் தெரியலை…” அவன் விளக்க….
ஆதிரன் இவளைப் பத்தி என்ன நினைப்பாரோ என்றிருந்த கன்சர்ன் அவளுக்கு குறைய….ஆனாலும் குழந்தைய பத்தின உன் கன்சர்ன் அலாதிதான் என்ற எண்ணமும் விவனைப் பார்த்து எழ….
சரி இதுக்கு மேல இந்த விஷயத்தில் மூக்கை பிசைய வேண்டாம்…..அபவ் டர்ன்…. என்ற முடிவில்
“எங்கயோ போலாம்னு சொன்னீங்கல்ல விவன்….போய்ட்டு வரலாமா… டாக்டர் கூட சரின்னு சொன்னாங்களே…?” என பேச்சை மாற்றினாள்…