(Reading time: 31 - 62 minutes)

சோ கண்மணி மஹிபால் திருமணத்தை  பதிஞ்சுகிட்டே…..இடை இடையே அந்த அனீஷ் ப்ரியா கல்யாண பக்கத்தை நிரப்ப ட்ரை பண்ண நாதன்…டென்ஷன்ல… அனீஷின் ப்ரியா டீடெய்ல் எழுதுவதற்கு பதிலா….அங்க இருந்த ரியா அப்ளிகேஷன் டீடெய்லையே அதில் எழுதிட்டார்…… இதுவும் ப்ரியாவாச்சே….

அப்றம்தான் அது உறைக்க…. எப்டியும் அனீஷை கூப்ட்டு இப்ப கையெழுத்து உடனே வாங்க முடியாதுன்றதால….கண் முன்னால சாட்சி கையெழுத்துக்கு வந்திருக்கும்  விவன் டீடெய்லை அதில் பதிஞ்சு….. அவர் வழக்கமான டெக்னிக் படி நாலஞ்சு இடத்தில் கையெழுத்து போட சொல்ற மாதிரி விவன் கையெழுத்தை இதுலயும் வாங்கிட்டார்…..

அப்டின்னா ரெய்ட் ஆஃபீஸர்ஸ் பார்க்கிறப்ப…..இப்படியும் ஒரு ஜோடிக்கு முன்னால மேரேஜாகி இருக்குது போலன்னு புரிஞ்சுப்பாங்களே….. நாதன் தப்பிச்சுடலாம்…..

சோ விவனை பொறுத்தவரைக்கும் நடந்தது கண்மணி மஹிபால் வெட்டிங் ரெஜிஸ்ட்ரேஷன்….. உண்மையில் நடந்தது அது தவிர விவன் ரியாவோடதும் தான்… ரெண்டுக்கும் தேதிதான் வேற…. விவன் ரியாவோடதுக்கு தேதி ஜூலை 14…..கண்மணி மஹிபாலுக்கு ஆகஸ்ட் 22…..

செய்ற தப்ப திருந்த செய்யனும் இல்லையா….இந்த விவன் ரியா வெட்டிங் பதிவை சிஸ்டமிலும் ஃபீட் செய்துட்டார் நாதன்…. ரெய்ட் மக்கள்ட்ட இருந்து அன்னைக்கு அவர் தப்பிக்கனும்னா சிஸ்டம் டீடெய்லும் ரெஜிஸ்ட்டரும் டேலி ஆகனுமே….. ஜூலை 14 ல் நடந்த கல்யாணம் இன்னும் எப்படி சிஸ்டமுக்கு போகாம இருக்குன்னு கேள்வி வருமே…..

மறுநாள் வந்து என்ன செய்யலாம்னு பார்த்துக்கலாம் என்ற நினைவில் ரியா அப்ளிகேஷனை கூட கையில் கொண்டு போய்விட்டார் நாதன்….

அன்னைக்கு நைட் அவருக்கு ஹார்ட் அட்டாக்…..சோ லாங்க் லீவ்…. இதில் இவர் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்…எப்படி இருந்தாலும் இவர் மாட்டப் போறது இல்லையே……

இது எதுவும் தெரியாமல் 31 வது நாள் செபினோடு ரெஜிஸ்ட்டர் மேரேஜ் என ரியா அங்கு வர……அங்குதான் தொடங்கியது விவன் ரியா திருமண காதை….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

விஷயம் புரியவும் ரியாவுக்கு என்ன செய்கிறதென்றே சொல்ல முடியாத நிலை…. என்னவெல்லாமோ செய்கிறது அவளுக்கு….. இதைப் போய் விவன் செய்ததா நினச்சு முன்னால எவ்ளவு கோபபட்றுப்பா என்றிருக்கிறது என்றால்…… மறுபுறமோ ஏற்கனவே வெறும் இரக்கத்தில்தான் கல்யாணத்திற்கு கேட்டேன் என சொல்லி இருக்கும் விவன் விஷயம்…..கூடவே கல்யாணம்னு சொல்லவே முடியாத இப்படி ஒரு கல்யாணம்….எல்லாவற்றையும் எப்படி எடுக்க வேண்டும் இவள்???…. என புரியாத நிலை….

திரும்பி விவனைப் பார்த்தாள்….. பரவாயில்ல இதாலதான் எங்க மேரேஜ் செட்லாச்சு….அவனை கொஞ்சம் சிம்ப்ளா பனிஷ் செய்துட்டு விட்டுடுங்க சார்னு அவன் ஆதிரன்ட்ட சொல்லி இருந்தா இவளுக்கு பெட்டரா இருக்குமோ…..படிச்ச கதை எல்லாத்திலயும் ஹீரோயின லவ் பண்ற ஹீரோ இப்டித்தானே சொல்வான்…..???

ஆனால் விவனோ அக்மார்க் கோபத்தில் இருந்தான். ஆதிரனையும் மீறி இந்த நாதனை அடித்து துவைத்து விடுவான் போலும்…. அப்படி ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தான்……விவனுக்கு இவ்ளவு கோபம் கூட வர முடியும் என்றே இவளுக்கு இப்போதுதான் தெரிகிறது…

“கண் முன்ன நின்ன என்னைய மீறி கொன்னாலும் கொன்னுடப் போறேன்…..ஒழுங்கா போய் சரண்டர் ஆகிடு… அதுதான் உனக்கு நல்லது…..ஆதிரன் சார்….இவனுக்கு மேக்சிமம் என்ன பனிஷ்மென்ட் வாங்கி கொடுக்க முடியுமோ எல்லாம் வாங்கி கொடுக்கனும்….அவன் ஆஃபீஸ் சைட் ஆக்க்ஷன், லீகல் ஆக்க்ஷன் ஒன்னுவிடக் கூடாது…. ஸ்டேஷன்ல வச்சு இவனுக்கு கட்ற லாடத்துல இன்னொருதடவ இப்டி ஒரு வேலை செய்ய இவனுக்கு நினப்பே வர கூடாது….. நாயே…. கல்யாணம்ன்றது உனக்கு அவ்ளவு சாதாரணமா தெரியுது என்ன…..எத்தன பேர் வாழ்க்கைடா அது….? மனுஷன அணு அணுவா கொன்னுட்டியே நாயே…. “ அவன் கோபம் ஏறிக் கொண்டே போகிறது ..வார்த்தையும் தடித்துக் கொண்டே போகிறது….

அவன் கோபத்தை காணவுமே நடுநடுங்கிப் போயிருந்த ரியா….. மனுஷன அணு அணுவா கொன்னுட்டியேவில்  துடி துடித்துப் போனாள்…. இவள மேரேஜ் செய்தது விவனுக்கு அவ்ளவு கஷ்டமா இருக்குதுன்னு தானே அர்த்தம்….

நாதன் செய்தது ரொம்பவும் பெரிய தப்பு என்பதில் இவளுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனாலும்……

இதற்கு மேல் இங்கு நிற்க கூட முடியாது என்பது போல் வருகிறது இவளுக்கு மெல்ல நடந்து தனக்கான அறைக்குள் சென்றுவிட்டாள் அவள்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.