(Reading time: 25 - 50 minutes)

வளையே பார்த்திருந்த ஜெய்யிற்கு அவளின் வருத்தம் கொண்டாட்டமாக இருந்தது.  எப்போதுமே அவள் எதற்காகவும் வருந்த கூடாதென்று நினைப்பவனுக்கு இப்போது அவளுடைய வருத்தம் மிகவும் அவசியமாகி போனது.  இதனைக் காணத்தானே இத்தனை நாட்களும் அவளை பார்க்காது பேசாது புறக்கணித்து அவளையும் வதைத்து தானும் பிரிவுத்துயரை அனுபவித்திருந்தான்.  அவள் எனக்காக ஏங்குகிறாள்.  அவளின் தவிப்பு எனக்கான தவிப்பு.  முகத்தின் வாட்டமும் எனக்காகவே என்று நினைத்து பெருமிதம் கொண்டான் ஜெய்.  அவளின் தவிப்புக்கு முடிவுகட்ட நினைத்தவன் அவர்களை நோக்கி நடந்தான்.

பொதுவாக எல்லாரயும் வரவேற்று; பின் வேதிக்கிடம் ஆரம்பித்து கிரண், சௌம்யாவை பேசவைத்தவன் ரூபின் தாயின் உடல்நலம் குறித்தும் விசாரித்தான்.

“ரூபின் அம்மாக்கு இப்போ பரவாயில்ல, சஞ்சய்.. சிக்கன் குனியாங்கிறதால இன்னும் ஒரு நாள் ஹாஸ்பிடல்ல இருக்க வேண்டியிருக்குமா.. அப்புற டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்களா” என்றாள் சௌம்யா.

“உன்னோட டான்ஸை வீடியோல பார்த்திருவா சௌம்யா! அவனோட அம்மாக்கு உடம்புக்கு முடியலனுதா உன்னோட இருக்க முடியல..”

“எனக்கு புரியுது சஞ்சய்! நானும் அம்மாவை பார்த்துட்டு வந்தே” சூழ்நிலை புரிந்தும் ரூபின் உடனில்லாதது அவளின் வார்த்தைகளிலிருந்த வெறுமையில் தெரிந்தது.

“சியர் அப் சௌம்யா” அவளை தேற்றியவன்; வரிசைபடி அடுத்து சரயூவிடம் பேச வேண்டும்.

ஜெய் அங்கே வந்ததிலிருந்து இமைக்காது அவனையே பார்த்திருந்த சரயூ இப்போது தன்னிடம் பேசுவானா என்ற கேள்வியையும் தவிப்பையும் கண்களில் தாங்கி நின்றிருந்தாள்.

அவள் புறமாக திரும்பியவனோ அமைதியாக அவளைப் பார்த்திருந்தான்.

வாய் பேசாத போதும் அவர்களின் கண்கள் நான்கும் இத்தனை நாட்களின் கதைகளை சத்தமாக பேசி கொண்டிருந்தன.

அவர்களுக்கிடையே நடந்த பார்வை பரிமாற்றத்தை கவனித்த கிரண் அதிர்ந்து போனான்.  வெகுண்டெழுந்த கோபத்தோடு ஒரு முடிவுக்கு வந்தான்.

Episode 11

Episode 13

முத்து ஒளிரும்…

{kunena_discuss:1038}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.