(Reading time: 18 - 35 minutes)

வர் அவ்வாறு கேட்டதும் எங்கள் மோட்டார் நிறுவனத்தின் பங்குகள் எப்படி அவர்கள் வீட்டாரிடம் அதிகம் போனது என்ற விபரம் உங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்.

என் தங்கையை அவர்களின் குடும்பத்தில் தான் கல்யாணம் செய்து கொடுத்துள்ளோம். அதனால், என் தங்கையின் பேரில் இருந்த பங்குகளுடன் ஏற்கனவே அவர்களின் வீட்டார் வாங்கி இருந்த பங்குகளும் சேர்ந்ததால் தான் அவர்களின் ஷேர் எண்ணிக்கை அதிகரித்தது.ஆனால் என் தங்கை இன்று மதியம் எனக்கு அந்த ஷேர் ஐ மாற்றிக்கொடுக்கப் போகிறாள். சோ! திரும்ப வீழும் என் பங்குத்தொகையின் மதிப்பு ஜெட் வேகத்தில் திரும்ப உயரப்போகிறது.

அதற்கும் உங்கள் பையனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆனால் அந்த ஐஸ்வர்யாவிற்கும் உங்களின் மகனுக்கும் சம்மந்தம் உண்டு என்றவன் இப்பொழுது அந்த பெண் வயிற்றில் உங்கள் மகனின் குழந்தை உள்ளது என்றான் மஹிந்த்.

அவன் அவ்வாறு கூறவும் ஓர் நிமிடம் அதிர்ச்ச்யில் பேச வார்த்தை அவருக்கு வரவில்லை. பின் கோபமாக என்ன சார் நீங்கள் பெரிய கிங் ஆக இருக்கலாம். அதற்காக் என் மகன் மீது இவவளவு பெரிய பழியைப் போடலாமா? என்று கூறினார்.

அவர் அவ்வாறு சொல்லிக்கொண்டு இருக்கும் போது மஹிந்தனின் ஆட்கள் இரண்டு பேர் அஜய்யின் இருபுறமும் அவனை மிரட்டியபடி கூப்பிட்டு வந்து அவர்கள் இருந்த மேஜையின் அருகில் நிற்க வைத்தனர்.

மஹிந்தன் அன்று அந்த ஹால் முழுவதும் புக் செய்திருந்ததால் அவர்களைத் தவிர வேறு யாரும் அந்த ஹாலில் இல்லை. மேலும் அவர்கள் உள்ளே வந்ததும் அந்த ஹாலின் அனைத்து வாசலிலும் மஹிந்தனின் ஆட்கள் காவலுக்கு நின்றிருந்தனர்.

அப்பொழுதுதான் குமாரசாமி தன் மகனை மிரட்டியபடி கூப்பிடுவந்து தன் எதிரில் நிற்க வைத்ததும் தன்னை சுற்றி உள்ள சூழ்நிலையை கவனித்தார் இது என்னுடைய ஹோட்டல் சோ இப்பொழுது வேற யாரும் நம்மை டிஸ்டப் பண்ண மாட்டார்கள். நீங்கள் உங்கள் மகனிடம் ஐஸ்வர்யாவுடன் அவனுக்கு இருக்கும் தொடர்பு எப்படிப்பட்டது என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்றான்.

தன் தந்தையைப் பார்த்ததும் தலை கவிழ்ந்து நின்ற அஜித்திடம் இவர்கள் சொல்வதெல்லாம் உண்மையா? என்று கேட்டார் குமாரசாமி.

உடனே அஜித், டாட் அது அவளோட தவறு ,ஐஸ்க்குத் தெரியும் நாங்கள் ரெண்டுபேரும் ஜஸ்ட் பிரண்ட்ஸ் தான்.சோ! அவள் பாதுகாப்பில்லாமல் என்னுடன் என்ஜாய் பண்ணி இவ்வாறு ஆகிவிட்டால் அதற்கு நான் எப்படி பொறுப்பாகமுடியும் இப்பவும் ஒன்றும் குழந்தை பிறந்துவிடவில்லையே அபர்சன் பண்ணினால் பிரச்சனை முடிந்து விடப் போகிறது.நீங்கள் வொரி பண்ணிக்காதீர்கள் என்று அவன் கூறி முடிப்பதற்குள் வேகமாக எழுந்த குமரேசன் அஜித்தின் கன்னத்தில் பளார் என்று ஓர் அரை கொடுத்தார்.

பின் மஹிந்தனைப் பார்த்து, உடனே கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றவர் விறுவிறு என்று வெளியேறினார். அவரின் பின்னாலேயே டாட் டாட் என்று கூறிக்கொண்டே அஜித்தும் சென்று விட்டான்.

தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:1081}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.