ரிஷியின் சைகையில் அதிர்ந்து நின்றிருந்த இளமாறனிடம், “இலா, அந்த பேக்கையும், டெபிள் மேல உள்ள திங்க்சையும் எடுத்துக்கோங்க, இது காவ்யாவோடது!” என்றான்.
இருவரும் வெளியே வர, இளமாறம் எல்லா பொருட்களையும் ரிஷியின் காரில் வைத்தான். இன்னும் மயங்கிய நிலையில் ரிஷியின் கைகளில் சலனமில்லாது கிடந்தாள் காவ்யா. அவளை காரின் பின் சீட்டில் கிடத்தினான் ரிஷி. பின் இளமாறனிடம் திரும்பி, “சாரி, இலா, ஷி இஸ் சைல்டிஷ், விவரம் தெரியாம அவசர பட்டிருப்பா.. நீங்க தப்பா நினைகாதீங்க…மத்தபடி இதை நான் பார்த்துக்கிறேன், நீங்க ரிலாக்ஸ் ஆயிட்டு ஆஃபீஸ் வாங்க” – என்றான் புன்னகையுடன்.
இளமாறன் சினேகமாக புன்னகைத்தான். “தேங்க்ஸ் சார், மேம் உங்க வுட்பீனு தெரிஞ்சதும் அவங்க மேல உள்ள கோபம்லாம் போயிட்டு.. பாவம் அவங்க மேலேயும் தப்பில்ல அவங்க என்னை தாப்பா புரிஞ்சுக்கிறமாதிரி அமைஞ்சுட்டு, நீங்க கேர்ஃபுல்லா கூட்டிட்டுபோங்க.. நாம நாளைக்கு ஆஃபீஸ்ல பார்க்கலாம்!”
இளமாறன் சென்றதும். காரில் ஏறியவன் காவ்யாவைப்பார்த்தான் மென்மையான மூச்சுக்காற்று வெளியேற கிறங்கி கிடந்தவளை அள்ளி மார்போடு அனைக்கும் தாபம் மேலிட, தன்னை அடக்கிகொண்டு வண்டியைக் கிளப்பினான்.. கண்கள் சாலையில் பதிந்திருந்தாலும் அவன் உள்ளம் மட்டும் பின்னிருக்கையில் மயங்கிகிடந்தவளின் மீது சரிந்து கிடந்தது. அவன் கையின் வண்ணத்தில் சிவந்திருந்த அந்த கண்ணத்தை வருடும் எண்ணம் மட்டுமே அவனை அப்போது இயக்கியது…
தொடரும்
{kunena_discuss:1120}