(Reading time: 40 - 79 minutes)

கடந்த சில மாதங்களாகவே வீட்டு கட்டுமானம் நிறைவு பெற வரும் போதே வீட்டிற்க்குள் ஏகத்திற்கு சலசலப்பு.

அனிக்காவிற்குத்தான் இந்த வீட்டை விட்டுச் செல்ல விருப்பமே இல்லை. நாம அத்தை, மாமா எல்லோர் கூடவும் இருப்போம் அத்தான் . எதுக்கு அங்க போய் தனியா? என அதிருப்தியை காட்டினாள்.

வாங்கம்மா, அப்பா எல்லோருமா சேர்ந்து இருப்போம் என்றுச் சொல்லிப் பார்த்தான் ரூபன். ஆம் முன்பு போலல்லாது அம்மாவிடமும், வீட்டில் எல்லோருடனும் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தான். எல்லாம் அனிக்கா மயம்.

தீபன் கூப்பிட்டு அவனோடு இருக்கச் செல்லாதவர்கள் இப்போது ரூபன் கூப்பிட்டதும் செல்வது தவறு என்று பெரியவர்களுக்கு தோன்றியது. பிள்ளைகள் மட்டில் யாருக்கும் மனப்பேதம் வந்து விடக் கூடாது என்பதில் அவர்கள் மிக கவனமாய் இருந்தார்கள்.

அட நீ வேற மருமகளே, நானே இப்பத்தான் ரிடையர்ட் ஆகி வந்திருக்கேன், உங்க கூடவே வந்திட்டா எங்களுக்கு பிரைவசி கிடைக்குமா? என சிரிப்பு வெடி கொளுத்திப் போட்டார். கேட்டவளுக்கு சிரிப்பென்றால், இந்திராவிற்கு வெட்கமாகி போய்விட்டது.

உங்களுக்கு இந்த வயசுல இப்படி பேச வெட்கமாயில்லை, பிள்ளையில்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாண்டானாம் அப்படில்லா இருக்கு என்று அவர் பொரிவதும், ராஜ் பணிவதுமாக ரூபனுக்கும், அனிக்காவுக்கும் அந்த விளையாட்டை பார்க்க பார்க்க சலிக்கவில்லை ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

அப்போது ஒரு நாள் அனிக்கா கருவுற்றிருப்பது தெரிய வர, ரூபனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. மனைவியை இன்னுமாய் கொண்டாடினான். கருவுற்றிருக்கும் காலத்தில் எதற்காக வீடு மாற வேண்டும், இப்போது முழுவதுமாக அங்கு ஷிப்ட் ஆகாவிட்டாலும் கொஞ்ச கொஞ்சமாக அங்கு ஷிப்ட் ஆகிக் கொள்லலாம் என்று முடிவெடுத்தனர்.

இந்த நேரத்தில அனிப் பிள்ளையை தனியா விட முடியுமா? நீ என் பேரப்பிள்ளை பொறந்து தாய்ப்பால் குடிக்கிற வயசு வரைக்கும் இங்க தான் இருக்கணும் சொல்லிட்டேன், கொஞ்சம் வளர்ந்திட்ட பிறகு அவரவர் வீட்டுக்கு போங்க, இல்லை வேலையை பார்க்க போங்க நாங்க எங்க பேரப்பிள்ளைகளை பார்த்துக்கிறோம் என்று சொல்லி விட்டார் இந்திரா.

உங்க பேரப்பிள்ளையால உங்க பிரைவசி போச்சே மாமா என அனிக்கா எடுத்துக் கொடுக்க,

மாமாவும் மருமகளும் அடிவாங்காம போயிடுங்க என்ற இந்திராவின் முகத்தில் மகிழ்ச்சியே இருந்தது.

வீட்டு வேலை நிறைவுற பால்காய்ப்பு விழா அத்தையும், அம்மாவும், ப்ரீதா அக்காவும், பிரபா அண்ணியும், ஜாக்குலினும் முன்னே நின்று நடத்த அனிக்காவை யாரும் இடத்தை விட்டு அசையக் கூடாதென சொல்லி விட்டனர்.

ப்ரீதா குடும்பத்தினர், திவ்யா குடும்பத்தினரும் கலந்துக் கொண்டனர். திவ்யா கூட மாட ஒத்தாசையாக இருந்தாள். அவ்வப்போது ஜீவனுடன் டூயட் பாடவும் மறக்கவில்லை. திவ்யா பெற்றோர்கள் வீட்டை சுற்றி பார்க்கச் சென்றிருக்க,

ஏன் அனி ஜீவா தம்பியை காணோமே நீ பார்த்தியா என ப்ரீதா எடுத்துக் கொடுக்க,

அவன் இப்ப ரொம்ப பிஸி என அனிக்கா கிண்டலடிக்க டெரஸ் பக்கம் டூயட் பாடிக் கொண்டிருந்தவர்கள் திருதிருத்தவர்களாய் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நின்றனர்.

எனக்குன்னு அண்ணிங்க வாய்ச்சிருக்காங்க பாரு, என முணு முணுத்தவாறு கடந்துச் செல்ல திவ்யா அனியுடன் சேர்ந்து அமர்ந்துக் கொண்டாள்.

அனியும் ப்ரீதாவும் காற்றில் ஹை ஃபைவ் செய்துக் கொண்டனர்.

அவ பாட்டுக்கு மசக்கை படுத்தாம இருக்கிறாளே, ஒரு வேளை கொண்டிருக்கிறது பெண்பிள்ளையா இருக்குமோ என பெரியவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த ராபின், கட்டிலில் சாய்வாக அமர்ந்திருந்தவள் அருகே வந்து சற்று சேலையை அகற்றி அவள் வயிற்றில் கண்கள் பொருத்தி பார்க்கலானான்.

கூச்சமாய் இருக்க, என்னடா செய்யற குட்டி என அனிக்கா கேட்டாள்.

நான் குட்டி பாப்பாவை பாக்கேன் சித்தி அவ தெரியவே மாட்டேங்கிறா என்றான். பெரியவர்கள் சிரிக்க, சற்றே வளர்ந்து விட்ட ஹனிப்பாப்பா தன் கீச்சுக் குரலில்,

அதெல்லாம் தெரிய மாட்டாங்க டம்பி, என் பிரண்டு தான் எனக்கு சொன்னா ஹாஸ்பிடல் போயிதான் பாப்பாவ வாங்கிட்டு வருவாங்களாம், அவங்க  வீட்லயும் இப்பத்தான் தம்பி பாப்பா வாங்கிட்டு வந்துருக்காங்க” என நீட்டி முழக்கவும்,

ராபினையும், ஹனியையும் அருகில் அழைத்தவன்

உங்களுக்கு விளையாட தம்பி பாப்பா, தங்கச்சி பாப்பா எல்லாம் வேண்டாமா?

இரண்டு பேரும் வேணும் என தலையாட்ட,

அப்ப போயி உங்க அம்மா அப்பா கிட்ட அடம் பிடிங்க போங்க என ஏவி விட,

இரண்டும் அவரவர் அம்மாக்களிடம் போய் “ எனக்கு இப்பவே பாப்பா வேணும்” எனக் கேட்டு வைக்க, எஸ்கேப்பாக இருந்த ஜீவன் ப்ரீதா, பிரபா கையில் அடி வாங்கும் முன் அப்பா பின்னால் ஓடி மறைந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.