“மதி எனக்கு என்னவோ இந்த ராணி அந்தளவு ஜென்யூன் கேரக்டர் மாதிரி தெரியலை... அவ சொன்னதுல கல்யாணம் ஆனதுலேர்ந்து கடைசியா போலீஸ்ல மாட்டினதுவரை நிறைய இடத்துல ஓட்டை இருக்குது... அவ பின் விளைவுகள் பத்தி தெரிஞ்சுதான் அவனோட சேர்ந்து இருந்து இருக்கா.... எனக்கு என்னவோ நாளைக்கு அவன் பணம் தர்றேன்னு சொன்னா அவ பல்ட்டி அடிச்சுடுவாளோன்னு தோணுது...”
“எனக்கும் அப்படித்தான் தோணுது சந்திரன் சார்... எப்படியுமே நமக்கு முதல்ல அந்தாள் மேல FIR போடத்தான் இவ உதவி தேவை... அதுக்குப்பிறகு அவனை அவனோட இல்லீகல் வேலைகளை வச்சே மாட்ட வச்சுக்கலாம்....”
“மதி சார், நீங்க FIR சொன்ன உடனேதான் நியாபகம் வருது... சீனியர் நம்ம காட்டுல இப்போ மழைன்னு நினைக்கறேன்... ஏகப்பட்ட கேஸ் நம்மளைத் தேடி வருது... இன்னைக்கு மயூரின்னு ஒரு பொண்ணு நாங்க மாரி வீட்டுல இருக்குபோது எங்களைப் பார்க்க வந்து இருந்தாங்க....”, என்று கூறி, மயூரியின் கேஸ் நிலவரம் அனைத்தையும் விவரித்தாள்.
“ஒரு சில போலீஸ்காரர்கள் இந்த மாதிரி நடந்துக்கறத வச்சு ஒட்டு மொத்த போலீஸ்காரர்களுக்கும் கெட்ட பேரு... பாரதி சாரங்கனை அந்த பொண்ணுக்கிட்ட டீடைல்ஸ் வாங்கிட்டு நேரா இங்க வர சொல்லு... கம்ப்ளைன்ட் கொடுக்கறத பத்தி பேசலாம்....”, மதி கூற பாரதியும் அதன்படியே செய்தாள்...
மூன்று நாள்கள் இரண்டு கேஸ் தொடர்பாகவும் டாக்குமென்ட்டுகள் தயாரிப்பதில் செலவாக. மூன்றாவது நாள் காலையில் இரண்டு தனித்தனி போலீஸ் ஸ்டேஷன்களில் ஒன்றில் நடிகருக்கு எதிராகவும், மற்றொன்றில் அந்த துணிக்கடை அதிபருக்கு எதிராகவும் FIR போடப்பட்டது.
தொடரும்
{kunena_discuss:1100}