சிறுநடை தூரம் உன்னோடு நான் வந்தேன்
சில்லென்ற உன் பார்வை பட காத்திருந்தேன்
அவ்வளவு அழகாய் அன்பே நீ இருந்தாய்
அய்யய்யோ ஐயோ நானும் என்ன செய்வேன்
பின், இருவரும் காரில் ஏற, தொடர்ந்தது பயணம். அமைதியான அந்த வேளையில், ப்ரியா தன் வேலையான ப்ரனிஷை சைட்டடிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை (அவன் அறியாமல் தான்!)
ஹோ எவ்வளவு தூரம் நடப்பாய் தனியே
ஏன் இந்த மௌனம் என் கண்மணியே
உன் விரலோடு விரல் கோர்த்து
நான் வரவேண்டும் துணையே
அவர்கள் வீட்டை அடைந்ததும் தோட்டத்தைப் பார்வையிடவென்று சாக்கிட்டு ப்ரனிஷ் சென்றுவிட, தனித்திருந்தால் ப்ரியா. அவளுக்கு இப்போது கண்டிப்பாக ப்ரனிஷின் காதலை பெற்றிடுவாள் என்ற நம்பிக்கை வந்திருந்தது.
ஒரு நொடியில் கடந்தேன் அன்பே இவ்விரவை
என் உயிரில் வைத்தேன் உன் உறவை உறவை
நான் உனதானேன் என எப்படி நான் சொல்வேன்
என் அன்பாலே உனை வெல்வேன் வெல்வேன்
இது குருட்டு நம்பிக்கையா? இல்லை ப்ரியா அவள் எண்ணப்படி ப்ரனிஷை விரும்ப வைப்பாளா? ப்ரனிஷ் யாரெனத் தெரிந்தபின்னும் இந்த உறுதி இருக்குமா அவளிடம்? இருவரின் குடும்பமும் என்னவாகும் இதனால்?
காணவில்லைன்னு போஸ்டர் அடிப்பதற்கு முன் அப்டேட் கொடுத்துவிட்டேன் நண்பர்களே… எல்லாரும் லேட்டா வந்ததுக்கு என்னை மறக்காமல் திட்டிடுங்க… நமக்கும் punctuality-க்கும் ராசியே இல்லை… அடுத்த அப்டேட் சீக்கிரமே கொடுக்கறேன்னு எல்லாம் நான் சொல்லலை இப்போ (ஹீஹீஹீ… எனக்கே தெரிஞ்சிடுச்சு அது கஸ்டம்னு)… முடிந்தவரை ட்ரை பண்றேன்… மன்னிச்சிடுங்கப்பா… இந்த பொண்ணும் கதை எழுதுதுன்னு அதைப் படித்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் நன்றி…
தொடரும்
Next episode will be published as soon as the writer shares her next episode.
{kunena_discuss:1075}