தொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 07 - கார்த்திகா கார்த்திகேயன்
என்ன மேடம் இன்னும் தூங்கலையா. நீ போன் பண்ண வில்லை என்ற உடன் கும்பகர்னி மாதிரி தூங்கி இருப்பனு நினைச்சேன்.
நீ தான போன் பண்ண சொன்ன. அம்மா அப்பா தூங்கும் வரைக்கும் வெயிட் பண்ணிவிட்டு பண்றேன்.
இப்படி குசு குசு என்று பேசி மனுசனை உசுபேத்தி விடாத டீ என்னவோ போல இருக்கு. ஏற்கனவே இன்னைக்கு நடந்தது அப்படியே வானத்தில் பறப்பது மாதிரி இருக்கு.
இருக்கும் இருக்கும் ஏன் இருக்காது யாராவது பார்த்திருந்தால் என்ன ஆயிருக்கும். அதுல எனக்கு உன் மேல ரொம்ப கோபம் ஆமா.
ஐஐயோ மேடம் கு கோபமா நம்ப முடியவில்லையே. குடுக்கும் போது கண்ணை மூடி ரசித்துவிட்டு திருப்பியும் கூடுஎன்று சொல்ற மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு ஒருத்தங்க நின்னாங்க . அந்த மானஸ்தி இப்ப எங்க போனங்களோ.
கிண்டல் செய்யாத வினோ
ஏண்டி அது எப்டி டி எல்லாரும் பிடிக்காத மாதிரியே நடிக்கிறீங்க ஆனா எங்கள விட உருகுறதது நீங்களா தான் இருக்கும்.
பன்மைலே பேசுற அனுபவம் பேசுதோ
அபர்ணா..
ஐஒ ஸாரீ வினோத் தெரியாம சொல்லிவிட்டேன் டக்குனு. ஹர்ட் பண்ணிட்டேனா ஸாரீ பா.
பதில் இல்லை அவனிடம்
ப்லீஸ் வினோ உன்னோட அப்பு தான மன்னிச்சிகோ ப்லீஸ்.
....
டேய் இப்ப மன்னிக்க போறியா இல்லையா. அநேகமா நான் தான் கோப படனும் . நீ எப்படி எனக்கு முன்னாடியே இன்னொருத்தியை காதலிக்கலாம். உனக்கு தான நான் பிறந்துருக்கேன் உன்னை யாரு அவசர பட சொன்னது. இப்ப மன்னித்தே ஆகணும் ஆமா
அவள் பதிலில் சிரித்து விட்டான். மன்னிப்பை கூட இப்படி தான் கேப்பியா அப்பு. அப்றம் நீ கேட்டது தப்பு இல்லை டா . நீ சொன்ன மாதிரி அவசர பட்டுவிட்டேன் தான். ஆனால் நீ நினைக்குற மாதிரி இல்லை. நான் எங்க அம்மாக்கு அடுத்து தொட்டது உன்னை மட்டும் தான்
வினோ
ஆமா டி செல்லம். என் மூளை மட்டும் வேணா அவளால் அழுக்கா ஆகிஇருக்கலாம் ஆனால் என்னோட மனசும் உடம்பும் உனக்காக மட்டும் சுத்தமா தான் இருக்கு. அழுக்கா இருந்த மூளையையும் சலவை செய்துட்ட குட்டிமா நீ ஐ லவ் யூ டா
ஐ லவ் யூ சோ முச் வினோ .
அதை கொஞ்சம் சத்தமா சொல்லேன் டீ . காதில் விழவேஇல்லை .
என்னால இப்படி தான் பேச முடியும் வினோ. இல்லாவிட்டால் சத்தம் கேக்கும். உங்களுக்கு பிடிக்கலை என்றால் பகலில் பேசலாம் இப்ப வச்சிரவா. வம்புக்காக வெறுப்பெற்றினாள்.
நல்லா தான பொய்க்கிட்டு இருக்கு ஏம்மா தாயே நீ பேசவே வேண்டாம் நான் பேசுறததை மட்டும் கேட்டால் போதும். தூக்கம் வருதா. எனக்கு வரலை இன்னைக்கு கிடைச்ச முத்தத்தில் எனக்கு இனி என்னைக்கு தூக்கம் வர போகுதோ.
ம்ம்ம் போ என்று சிணுங்கினாள் அபர்ணா
இப்ப தனே சொன்னேன் சிணுங்காத னு . எனக்கு என்னவோ செய்து டீ . சரி நீ அமைதியா நான் சொல்ல வரதை கேளு. உனக்கு என்ன பற்றிய விசயம் தெரியும்னு கீர்த்தி சொன்னாள். இருந்தாலும் நானும் சொல்லணும். அதுக்கு முன்னாடி ஒரே ஒரு கேள்வி மா. நீ எந்த சூழ் நிலையிலும் என்னை விட்டு போக மாட்ட தான.
போக மாட்டேன் கண்டிப்பா. எனக்கு இந்த ஜென்மத்தில் நீங்க தான். வாழ போறது இனி ஒரு 40 இல்லை 60 வருசம் சேர்ந்து இருக்க போறோம். மனசுக்குள்ள நீங்க வந்துவீட்டீங்க அதை மாதிரி என்னையும் கஸ்ட படுத்தி உங்களையும் காய படுத்த மாட்டேன்.
எல்லாருமே காதல் ஜெயிக்கணும் என்று தான் நினைப்பாங்க. ஆனால் அவர்கள் சூழ்நிலை தான் பிரிக்கிறது. அதிகமாக பெற்றவர்கள் தான் காரணமாக இருப்பாங்க.
அதுக்காக பெத்தவங்க மேல தப்பு சொல்ல வர வில்லை. ஆனாலும் அவங்க ஒரு காரணம். சும்மா ஒரு டைம் பாஸ்க்கு காதலிக்கிறனு சொல்றவங்க பற்றி எனக்கு தெரியாது. ஆனால் உண்மையாக விரும்புகிறவர்கள் அப்படி திசை மாறி போனத்துக்கு காரணம் பெற்றவர்கள் தான்.
ஏதாவது சூழ்நிலையில் தங்கள் பிள்ளைகளின் மேல் கவனத்தை வைக்க தவருகிறார்கள். அப்போது அந்த பிள்ளைகளின் மனது தனிமையில் தத்தலிக்கிறது. அதில் இருந்து தனிமை அவஸ்தையில் இருந்து காப்பாற்ற யாராவது வருவார்களா என்று உள்ளம் நாடுகிறது. அதனால் காதலில் விழுகிறார்கள். இதில் யார் மேல் தவறை சொல்வது பெற்றுவர்கள் மேலா. அவர்களுக்கு பணம் இல்லாதது காரணமாக இருக்கலாம். அதை சம்பாதிபபத்தில் பிள்ளைகளை மறந்து விடுகிறார்கள் அதும் தவறு இல்லை ஏன் என்றால் அந்த சம்பாதியம் பிள்ளைகளுக்கு தான்.