எல்லாரும் அபர்ணா என்ன சொல்ல போறா என்று அவளை பார்த்தனர். அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. கருவாயா அப்பு அப்பு அன்னைக்கு என்னை வினு னு கூப்ட மாதிரியே கூப்டு என்ன அதன் கிக்கா இருக்கு னு எண்ட வழிஞ்சான் இப்ப மாமாவா தனியா மாட்டுடா அப்ப இருக்கு என்று மனதுக்குள் அவனை தாளித்து கொண்டு இருந்தாள்.
அவள் முகத்தை வைத்தே அவள் நினைப்பதை அறிந்த வினோத் சமாதான பார்வையை தூது விட்டான்.
அவள் பேச போவது இல்லை என்பதை அறிந்த கார்த்திக் நீ என்ன சொல்லி இருந்தாலும் தப்பு இல்லை டா ஆனால் உனக்கு கம்பேர் பண்ண இந்த லூசா கிடைத்தது.
ஏன் கார்த்திக் அப்படி சொல்ற
பின்ன மரியாதைனா கிலோ என்ன விலைனு கேப்பா உன் தங்கச்சி அவ மரியாதையா கூப்பிடுறா சொல்ற.
மாமா வேண்டாம் சும்மா இருங்க ஏதாவது சொல்லி வைக்காதீங்க அப்றம் என்ன ஆகும்னு தெரியாது என்றாள் கீர்த்தி
ஏய் என்ன மிரட்டுறியா. நீ எனக்கு குடுக்கும் மரியாதையை அவனும் தெரிந்து கொள்ளட்டும்
உங்க மானத்தை நீங்களா வாங்கி கிட்ட யார் என்ன செய்ய முடியும் என்று மனத்தில் நினைத்து கொண்டு அமைதியாக இருந்தால்.
என்ன அண்ணா செஞ்சா கீர்த்தி என்று கேட்டாள் அபர்ணா.
இவ இப்ப தான் மாமா மாமா னு சொல்லிட்டு திரியுறா. அதுவும் அத்தைக்கு பயந்து இல்லாவிட்டால் வாயிலே சூடு வச்சிறுவாங்க . முன்னாடி எல்லாம் என்னை எப்படி ஆழ வைப்பாள் தெரியுமா. எங்க வீட்டில நான் பொண்ணு மாதிரியும் இவள் பையன் மாதிரியும் நடந்துக்குவா
வாரத்துல சனி ஞாயிறு நான் படும் அவஸ்தை இருக்கே. எப்படா வீட்டில இருந்து தப்பிச்சு ஓடலாம் நினைப்பேன். என்ன இஸ்டதுக்கு கிண்டல் செய்வாள் . பேறிக்கா மன்டையா , ஸ்பிரிங் மன்டையா சட்டி தலையா இப்படி எல்லாம் கூப்பிடுவாங்க மேடம்
ஹா ஹா ஹா செம்ம பொருத்தமான பேர் தான் டா உனக்கு. கீர்த்தி சேம எப்படி தான் இப்படி எல்லாம் யோசிப்பியோ என்று கார்த்திகை வெறுப்பெற்றினான் வினோத்.
இது தேவையா என்று கீர்த்தி கார்த்திகையும் நானும் இனி இப்படியே உன்னை கூப்பிடுறேன் என்று அபர்ணா வினோத்தையும் பார்த்தார்கள்.
கடைசியில் அனைவருக்கும் சிரிப்பே வந்தது.
ஏன் கார்த்திக் இப்போ சிரிப்பு வருது ஆனால் அப்ப சேம காண்டா இருந்துருக்கும் தான
காண்டா எனக்கு கொலை வெறியே வரும். எங்க அம்மா அப்பாக்கு பயந்து தான் பேசாம இருப்பேன். அப்படியும் என்கிட்ட வாங்கிஇருக்கா ரெண்டு தடவை.
அடி வாங்கிருக்கியா கீர்த்தி அண்ணா கிட்ட
அடியா ஹா ஹா அன்னைக்கு நடந்த விசயத்தை உங்க அண்ணா கிட்டயே கேளு
சிரிப்படி ஏன் சிரிக்க மாட்ட
ஏய் என்ன தான் பா நடந்தது ஸஸ்பென்ஸ் வைக்காத சொல்லு கார்த்திக்
அந்த கொடுமையை ஏன் கேக்க
முதல் தடவை 11த் படிக்கும் போது இந்த எருமை என் ரூம்கு வந்தது. எப்பவும் வந்தால் என்னோட பொருள் எல்லாத்தையும் உருட்டுரது தான் வேலை.
அப்படி ஒரு தடவை என் க்லாஸ் பொண்ணு எனக்கு லவ் லெட்டர் கொடுத்தது. அது என்னோட பாக்ல இருந்தது.
அது ஒரு வாரமாக என் பாக்ல தான் இருந்தது. தூக்கி போடணும்னு நினைச்சு மறந்து போன விசயம். அது போயும் போயும் இவ கையிலா கிடைக்கணும்.
அதை இவள் கையில் பார்த்த உடனே எனக்கு பீதிஆகிவிட்டது. என்ன வில்லங்கத்தை இழுத்து வைபளோனு. எங்க அப்பா கிட்ட போட்டு குடுத்தால் அவர் என்ன தொலைசிறுவாருனு நொந்து போய்விட்டேன் . இவள் கிட்ட போய் அதை வாங்க ட்ரை பண்ணேன் முடியவே இல்லை.
கடைசில கெஞ்சோ கெஞ்சுனு கெஞ்சினேன்
இவளும் சரி சரி வீட்டில யாருகிட்டயும் சொல்ல மாட்டேனு சொன்னா. நிம்மதியா இருந்தேன்.
ஆனா அந்த பிள்ளை உனக்கு என்ன பிடிக்கும் என்றால் இந்த நம்பர்க்கு போன் போடுனு எழுதி இருந்தாள் அந்த பொண்ணுக்கு போன் போட்டு கார்த்திக் க்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம் . ஆனா உன் லெட்டர் வீட்டில் பாத்துட்டு அவனை ரொம்ப அடித்து விட்டாங்க.
ஊடெம்பெல்லாம் காயம் அது இதுணு போய் சொல்லி இருக்கா .அந்த பொண்ணும்
காதலே நிம்மதி கணக்கா வீட்டுக்கே தேடி வந்து எங்க அப்பா கிட்ட ஒரே சண்டையாம் . நான் தான் லெட்டர் குடுத்தேன். அதுக்கு அவர் என்ன செய்வாரு நீங்க என் அவரை அடிசிங்கணு நான் வெளிய போய்ட்டு வறேன் எங்க அப்பா அய்யனார் கணக்கா முறைச்சிகிட்டு நின்னாரு.