(Reading time: 28 - 55 minutes)

எவ்வளவு  நேரம் தான் தூங்குவது போல் நடிபபது அவள் திரும்பின சுவடே  தெரிய வில்லை.ஒரு வேலை தூக்கத்தில் தான் பக்கத்தில் வருகிறாளோ நான் தான் ஆசையில் வருகிறாள் என்று நினைக்கிறேனோ என்று எண்ணினான் மனம் ஏனோ வருத்தமாக  இருந்தது. அவளிடம் எதை எதிர் பார்க்கிறோம் என்று அவனுக்கே புரிய வில்லை.

அவள் உன்னை  விரும்ப வில்லை  என்று நினைத்தால்  உனக்கு வருத்தமாக இருக்கிறதா என்று மனசாட்சி எழுப்பிய கேள்விக்கு அவனிடம் விடை தான் இல்லை. எதையும் யோசிக்காமல் தூங்குவோம் என்று முடிவு செய்த போது அவள் திரும்புவது தெரிந்தது. கண்களை இறுக்கி மூடி கொண்டான்

கைகளை கண் முன் ஆட்டினாள்  இருட்டில் இவன் கண்  விழித்திருபது  அவளுக்கு தெரிய வில்லை.

அவன் உறங்கி விட்டான் என்று முடிவு செய்தவள் அவனை நெருங்கி படுத்தாள். அவன் இடுப்பின் மேல் கை போட்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்வள் சிறிது விலகி நெஞ்சில் அழுந்த முத்தமிட்டாள். அவனுக்கு உயிர் வரை சிலிர்த்தது அம்முத்தம்  மறுபடியும் நெஞ்சினில் சாய்ந்து கொண்டாள்

அதற்கு  மேல் தூங்குவது போல் நடிக்க முடியாமல் அவளை இறுக்கினான் கார்த்திக். தூக்கத்தில் தான் செய்கிறான் என்று நினைத்து இவள் கைகளும் அவன் முதுகில் அழுந்த பதிந்தது.

அவன் இறுக்கம் கூடி கொண்டே போனதை உணர்ந்த பிறகு தான் அவன் தூங்க வில்லை என்று புரிந்தது.

மாமா தூங்கவில்லையா

ம்ம் என்றவன் அவன் அனைப்பை இன்னும் இறுக்கினான்.

விலக முயற்சித்தாள் . முடிய  வில்லை அவன் முகத்தை பார்த்தாள்  மிக அருகில். அவள் இடுப்பில் இருந்த கைகளை எடுத்தவன் அவள் கன்னத்தில் கையை வைத்தான். மெய் மறந்து அவனையே பார்த்து கொண்டிருந்தவளை பார்த்தவன் அடுத்த நொடி அவள் முகம் நோக்கி குனிந்தான்.

தன்  உதடு அவன் வசம்  இருக்கிறது என்பதை நம்ப முடியாமல் இருந்தாள்  கீர்த்தி. இதற்கு முன் ஒரு முறை உதட்டில் இவள் கொடுத்திருக்கிறாள் தான் ஆனால் அது இவளாக  கொடுத்தது. ஆனால் இன்று அவன் கொடுக்கும் போது மனம் பரவசம் அடைந்தது மட்டும் நிஜம்.

முத்தம் முடிவதற்கு முன்பே அவன் கைகள் அவள் உடலில் ஊர்வலம்  வந்தது. தடுக்க தோன்றியது கீர்த்திக்கு மனம் தடுக்க விரும்பாமல் அப்படியே இருந்தாள் . அடுத்து என்ன நடந்திருக்குமோ படக்கென்று விலகினான் கார்த்திக்.

அடுத்த நொடி ஸாரீ கீர்த்தி என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியேறினான். காதலை சொல்லாமல் என்ன காரியம் செய்ய இருந்தேன் நான் என்று குற்ற உணர்ச்சியில் தவித்தான்  கார்த்திக்.

அவனை சரியாக புரிந்து கொண்டாள் கீர்த்தி. ஆனால் அவன் அவளை விரும்புவது அவனுக்கே தெரிய வில்லையே என்று  நினைத்தாள். ஏன்  என்றாள் என் கீர்த்தி என்று சொன்ன வார்த்தையிலே அவனுடைய மனத்தை அறிந்து கொண்டாள்.

அவனுக்கும் ஒரு நாள் புரியும். இனிமேல் நான் அவனிடம் நெருங்க கூடாது என்றும் முடிவு எடுத்தாள். நெருக்த்தில் அவன் காதலை புரிந்து கொள்வது தவறு. அவன் யோசிக்கட்டும் அவனை சலன படுத்த கூடாது என்று நினைத்தவள் நிம்மதியாக  தூங்கினாள்.

வெளியே சென்றவன் மனம் உளை  கலமாக  கொதித்தது. தப்பு செய்து விட்டேனா அவன் மனசாட்சியே கேள்வி கேட்டது. என் பொண்டாட்டி இதில் என்ன தப்பு எதிர் கேள்வி கேட்டான். 

என்ன யோசித்தும் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தான் . எல்லா யோசனைகளையும் மீறி ஒரு பெண்மையை உணர்ந்த அவன் உடலும் மனமும் அவளை தேடியது. எவ்வளவு  ஸாஃப்டா  இருக்கா. 

சே  ஏன்  டா  தப்பு தப்பு யோசிக்க தன்னையே  திட்டி கொண்டான் . ஆனால் அவனுக்கு யார் சொல்வது  ஒரு ஆணாக இப்போது தான் சரியாய் யோசிக்கிறான் என்று.

சரி இதெல்லாம் அவள் படிப்பு  முடிந்த பிறகு தான் யோசிக்கணும்  என்று நினைத்தவன் அறைக்குள் நுழைந்தான். அலைகளைத்த உணர்வுகளை அடக்க முகத்தில் தன்ணியை வைத்து அடித்தவன் மனம் கொஞ்சம் நிதானம் அடைந்தது. அதில்  வெற்றியும் கண்டவன் அவள் அருகிலே படுத்து தூங்கி போனான் கார்த்திக்.

ன்று ஞாயிறு பெரியவர்கள் கிளம்பி சென்று விட்டனர். அதனால் நான்கு பெரும் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர். அபர்ணாவை  மட்டும் அவள் அன்னை 7 மணிக்குள் வந்து விட வேண்டும் என்ற கட்டளையோடு அனுப்பி வைத்தார்.

ஏண்டி  நாம கீர்த்தியை  பாரு கார்த்திக்கை  மாமா மாமா னு எவ்வளவு  மரியாதையா ஆசையா கூப்பிடுறா  நீயும்  இருக்கியே. ஒரு மாமா ஒரு  மச்சான் ஒரு அத்தான்  அப்டினு  கூப்பிட்டால்  தான் என்னவாம் என்று அபர்ணாவை  பார்த்து கேட்டான் வினோத்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.