அலுவலகத்தில், சற்றே யாரும் பார்த்திடாத இடத்தில் நின்று அழுது கொண்டிருந்தாள் சந்தா…
அவள் அழுவது நன்றாகவே தெரிந்தது அவளின் பின்னால் வந்து நின்ற ப்ரசனுக்கு…
“இஷி……”
அவன் குரல் ஆழமாக அழுத்தமாக அவள் செவிகளில் விழ, வேகமாக தனது காதுகளைப் பொத்திக்கொண்டாள் அவள்…
“அப்படி கூப்பிடாதீங்க…..”
அவள் குரல் அதிகாரமாகவும் அதே நேரம் உறுதியாகவும் ஒலித்த்து…
“ஏன்??....”
அவனும் தன்மையாக கேட்க, “எனக்குப் பிடிக்கலை….” என்றாள் பட்டென அவனைப் பார்க்க பிடிக்காமல் திரும்பியவாறு…
அவன் எதுவும் சொல்லாமல் இருப்பதை பார்த்து, அவன் புறம் திரும்பியவள், அவனைப் பார்த்திட, அவனோ சிரித்திட்டான்…
அவள் பதிலுக்கு முறைத்திட, “எதுக்கு இப்போ சிரிக்குறீங்க?...”
“பிடிக்கலைன்னு நீ என்னைப் பார்த்து நேருக்கு நேரா சொல்ல உனக்கு தைரியமில்லையே…. அத நினைச்சு தான் சிரிச்சேன்…”
அவன் பதில் அவளுக்கு வெறியேற்றிட, “என் முகத்துலயே முழிக்காதீங்கன்னு உங்ககிட்ட சொல்லிட்டு தான வந்தேன்…” என்றாள் அவள் ஆத்திரத்துடன்…
“உண்மை தான்… இத்தனை நாள் நீ சொன்னதுக்கு நான் மதிப்பு கொடுத்தேன் தான்… ஆனா இனியும் கொடுத்து உன்னை இப்படி தனியா கஷ்டப்பட விரும்பலை… அதான் திரும்ப உன் முன்னாடியே வந்துட்டேன்…”
“அய்யோ… எதுக்கு இப்படி என் முன்னாடி வந்து நின்னு என்னை சாகடிக்குறீங்க?...”
அவளின் கேள்வியில் ஒரு நிமிடம் நின்று நிதானமாக அவளைப் பார்த்தவன்,
“உன் கண்ணுல கோபம் தெரியலை… இந்த செகண்ட் அதுவும் அதிக பயம் தான் தெரியுது…”
அவன் சட்டென அவளின் உண்மை நிலையைக் கூறிட,
அவனை முறைத்து உறுத்து பார்த்தவள், வெறுப்பான ஒரு பார்வையை சிந்திவிட்டு அங்கிருந்து அகன்றாள் வேகமாக…
அவள் செல்லும் திசையையேப் பார்த்திருந்தவன், அவள் மறையும் வரை பார்த்திருந்துவிட்டு, அவள் நின்ற இட்த்தினையே சற்று நேரம் பார்த்திருந்தான் இமைக்காமல்…
அவள் பிடித்து நின்ற கம்பியினை தன் விரல்களினால் அவன் வருடிக்கொடுக்க, அவன் இதயம் மெல்ல தன் சுவாசத்தை வெளியிட்டது இதுவரை இல்லாத சந்தோஷத்துடன்…
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்… எப்படி இருக்கு இந்த வீக் அப்டேட்?...
படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்…
மீண்டும் அடுத்த வாரம் பூக்கும் புது எழில் வானில் சந்திக்கலாம்…
நன்றி….
எழில் பூக்கும்...!
{kunena_discuss:1122}