இந்த ஒரு மாத காலத்தில் கிடைக்கும் நேரங்களிலெல்லாம் சஞ்சய், நீரஜா இருவரும் காதல் பறவைகளாய் சுற்றி வந்தனர்… இந்த மூன்று வருட கணக்கையும் சேர்த்து ஒரே மாதத்தில் காதலித்து தீர்த்து கொள்ள நினைத்தனர்…. இருந்தும் இந்த ஒரு மாதம் இருவருக்கும் போதவில்லை… திருமண வேலைகள், ஷாப்பிங், அப்படி இப்படி என்று நாட்கள் ஓடி, திருமண நாளும் வந்தது…
அந்த பெரிய திருமண மண்டபத்தில் கூட்டத்திற்கு குறைவில்லை… சஞ்சய், நீரஜாவின் உறவினர்கள், நண்பர்கள், அவர்கள் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் என்று எல்லோருமே வந்திருந்தனர்…. அந்த மாலை நேரம் மணமக்கள் ஊர்வலமாக கோவிலில் இருந்து அழைக்கப்பட்டு, அந்த மண்டபத்துற்கு வந்திருந்தனர்… வட இந்தியர்கள் முறையில் அந்த மண்டபத்தை அலங்கரித்து, ரிஷப்ஷன் நடத்த மு
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் ஏதாவது உதவி தேவைப்பட்டாளோ… அவர்களுக்கு வந்த பரிசுப் பொருட்களை வாங்கி வைப்பதற்கும் அவள் அவர்கள் அருகிலேயே இருந்தாள்….
இப்போதும் நீரஜாவின் நகைகளை சரி செய்ய சொல்லி, புகைப்படம் எடுப்பவர் கூறவே, நீரஜாவை நெருங்கி அதை சரி செய்தவள் நிமிர்ந்த போது… அங்கே மணமேடை ஏறிக் கொண்டிருந்தான் மோகன்….