மோகன்… அவனை எப்படி மறந்துப் போனாள் இவள்… சஞ்சயும், நிகேதனும் அவனுக்கு நண்பர்கள் எனும் போது, இந்த திருமணத்திற்கு அவன் வருவான் என இவள் எவ்வாறு யோசிக்காமல் போனாள்… இப்படி திடீரென்று அவனைப் பார்த்த அதிர்ச்சியும், அவனைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்ததே, என்ற மகிழ்ச்சியோடும் அவனை இமைக்காமல் பார்த்திருந்தாள்…. இவள் அணிந்திருந்த லெஹங்காவிற்கு இணையான வண்ணத்தில் ஷெர்வானி அணிந்திருந்தான் அவன்… அவனும் இவளையே பார்த்தப்படியே தான் மேடை ஏறினான்….
அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து, பார்வையை திருப்பிக் கொண்டாள்… அவனோடு இணைந்து இன்னொரு வயதான பெண்மணியும் உடன் வந்தார்… அவர் இவனின் அன்னையாக தான் இருக்க வேண்டும்…. அன்னையோடு வந்திருக்கிறான்…?? ஏன் மனைவியோடு வரவில்லையா..?? ஒருவேளை திருமணம் ஆகவில்லையோ..?? ஆனால்
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசியிருக்காங்கன்னு நல்லாவே புரியுது… இருந்தாலும் பழசெல்லாம் எதுவும் மாறிடல..”
“சஞ்சயும், நீரஜாவும் என்கிட்ட எதுவும் பேசல மந்த்ரா… நீ அவங்களுக்கு செஞ்ச ஹெல்ப் பத்தி மட்டும் தான் சொன்னாங்க… நீ இந்த கல்யாணத்துக்கு வருவியான்னு நான் தான் கேட்டேன்… எனக்கு உன்னைப் பார்க்கனும் அதான் வந்தேன்…