மந்த்ரா, மோகனுக்காக அனைவரும் சாப்பிடாமல் காத்திருக்க, மோகனோடு அந்த டைனிங் ஹாலுக்குள் நுழைந்த மந்த்ரா, கண்களில் கண்ணீரோடு நீரஜாவை அணைத்துக் கொண்டவள், குலுங்கி குலுங்கி அழுதாள்…
“ஹே மந்த்ரா… எதுக்காக இப்போ அழற…” மந்த்ராவிடம் கேட்டப்படியே, அவள் மோகனை பார்த்து கண்ணாலேயே என்னவென்று கேட்டாள்.
“மந்த்ரா எதுக்கு அழற..” மோகனும் எதுவும் புரியாமல் கேட்டான்…
பின் மெதுவாக அழுகையை நிறுத்திய மந்த்ரா.. “என்னோட வாழ்க்கையே முடிஞ்சுப் போச்சுன்னு நினைச்சிட்டு இருந்தேன் நிரு… இன்னைக்கு இப்படி ஒரு சந்தோஷமா வாழ்க்கையை நான் தொடங்க நீங்க இரண்டுப் பேரும் தான் காரணம்… ரொம்ப தேங்க்ஸ்..” என்று நன்றி கூறினாள்.
“நாங்க என்ன செஞ்சுட்டோம் மந்த்ரா… உன்னைப் பத்தி மோக
...
This story is now available on Chillzee KiMo.
...
டுவாங்க… எங்களுக்கும் அதுல தான் சந்தோஷமே..”
“அதெல்லாம் வைஷுக்கும் சீக்கிரம் கல்யாணம் கூடி வரத்தான் போகுது நிரு… மாப்பிள்ளால்லாம் கூட ரெடி..” ஜானவி கூறினாள்… எல்லோருக்குமே இது புது செய்தி, நிகேதனுக்கு கூட இந்த விஷயம் தெரியவில்லை… ஜானவி சொன்ன அடுத்த நொடி, வைஷு முகத்தில் வெட்கப் புன்னகை…