சற்று நேரம் பார்த்த மாணவர்கள்.
“சார் ... என்ன ஆச்சு ?” என்று ஒரு மாணவன் அருகில் வர, அதில் சுதாரித்தவன்,
“ஹாய்.. ஸ்டுடென்ட்ஸ் .. சொல்லுங்க. “ என
ஒரு மாணவன் “ சார்.. உங்களுக்கு எதுவும் உடம்பு சரி இல்லியா? “ என்று வினவ
“ஏன் பா.. “
“இல்லை சார்.. உங்க கவனம் எல்லாம் கேம்லே இல்லை .. “ என்று போட்டு உடைத்தனர்..
தனக்குள் திடுக்கிட்டவன், இவர்கள் கவனிக்கும் வகையில் இருந்து இருக்கோமே.. நம்மை சரி செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணியவனாக..
“எஸ்.. பா.. கொஞ்சம் டயர்ட் தான். வேறு ஒன்றும் இல்லை.. வாங்க உங்க கூட ஒரு கேம் ஆடினேன் என்றால் ரிலாக்ஸ் ஆகி விடுவேன்..”
என்று தன் கவனத்தை அதில் திருப்பி வெற்றியும் கண்டான்.. என்னதான் அப்போதைக்கு சமாளித்தாலும், வீட்டில் மீண்டும் மாட்டினான்..
அவன் வீட்டிற்குள் வரும்போது அவன் அப்பா அமர்ந்து இருக்க, அவரை கவனியாதவனாக தன் அறைக்கு சென்று கொண்டு இருந்தான்..
“ ஏலே.. செழியா.. என்னடே விஷயம்.. கண்டுக்காம போயிட்டு இருக்க..?” என்ற அவன் அப்பாவின் குரலில் தன் நிலை உணர்ந்தவன், அவர் அருகில் அமர்ந்து..
“சொல்லுங்க பா “ என்று கேட்டவன்,
அவரின் பேச்சில் , கோபமடைந்து தன் அறைக்கு வேகமாக சென்று கதவை அறைந்து சாத்தினான்..
தொடரும்!
{kunena_discuss:1126}