(Reading time: 6 - 11 minutes)

“எங்கன்னு. உனக்கு தெரியாதா.. ஆத்தா.. வாய் தான் காவேரி வரைக்கும் பாயும்.. எதாவது ஒண்ணுன்னா.. அப்படியே பல்டி அடிச்சிடும்..நு.”

“அது சரிதான் பா.. ஆனாலும் என் லைன்லே அடிக்கடி கிராஸ் பண்ணிட்டு இருக்காங்க.. நீங்க கொஞ்சம் கண்டிச்சு வைங்க..”

“போக்கிரி... அது இருக்கட்டும்.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லியே..?”

“நோ ப்ரோப்லேம்பா..”

“சரிம்மா.. உனக்கு இனிமேல் மாப்பிள்ளை பார்க்கலாம் நு இருக்கேன்.. “

“என்னப்பா திடீர்ன்னு..”

“இல்லைடா.. ஆச்சி.. நீ UG முடிச்ச உடனே முடிக்க சொன்னாங்க.. நான்தான் நீ மேல படிக்கிற ஆசையில் இருக்கன்னு புரிஞ்சு அவங்கள சமாதன படுத்திட்டேன்.. இப்போ அவங்க திரும்ப ஆரம்பிச்சு இருக்காங்க.. இவ்ளோ நாள் என் பேச்சுக்கு மதிப்பு கொடுத்த அவங்களுக்கு.. இப்போ நான் திரும்ப மரியாதை கொடுக்கனும்லே..”

“அதுக்காக எல்லாம் என்னாலே திருமணம் செஞ்சுக்க முடியாது..

“அப்படி இல்லைடா.. இதவும்  சரியான நேரத்தில் செய்யணும்.. இல்லை என்றால் நல்லது இல்லை.. அதனால் நீ மற்ற எதை பற்றியும் யோசிக்காதே நாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.. உனக்கும் எங்களுக்கும் திருப்தியான பையன் கிடைத்த உடன் திருமணம் பேச ஆரம்பித்து விடுவேன்.. அதனால் நீ தயாராய் இரு..... “ என்றபடி அவளிடம் எடுத்து கூறினார்..

அவளால் தன் அப்பாவிடம் ஒன்றும் சொல்ல முடியவில்லை.. அவர் திருமணம் பார்க்க போகிறேன் என்று சொல்லும் முன்னால், நீ யாரையாவது விரும்புகிறாயா? என்று வினவி இருந்தால் , ஒரு வேளை செழியனிடம் தன் மனது சென்றதை சொல்லி இருப்பாளோ என்னவோ.. இப்போ ஒரே சொதப்பலா இருக்கே என்று எண்ணினாள்.

இந்த பிரச்சினை பற்றி செழியனிடம் எப்படி பேசுவது என்று எண்ணமே மலருக்க்கு,

அப்பாவும், பெண்ணும் ஒரு பக்கம்  நின்றார்கள்..  என்றால் , அம்மாவும், மற்றவர்களும் ஒரு பக்கம் நின்றார்கள். அதில் வடிவிற்கு இன்னும் மலரின் அப்பா வெளியில் மாப்பிளை பார்ப்பது தெரியாது.. தெரிஞ்சதால் என்ன செய்யப் போகிறாரோ

ஆனால் இவரின் அத்தனை கனவுகளும் பலிக்குமா.. ?

தொடரும்!

Episode # 17

Episode # 19

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.