(Reading time: 22 - 43 minutes)

இத்தனை ஆளுமையுடன் தன்னை வெளிப்படுத்திய பெண், தன்னுடைய திறமையால் இவனை திக்கு முக்காட வைத்தவள், அனைத்தையும் அரை நொடியில் உதறிவிட்டு, இவனை கண்களால் பருகி கெஞ்சல் தொனியில் யாசகம் கேட்கும் பெண் போல் அவன் முன்னாள் நிற்கிறாள்!”

“கீர்த்தனா” என் ஏதோ சொல்ல நினைத்தவன், வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு,  “நான் தொடமுடியாத உயரத்தில நீங்க இருக்கிறீங்க கீர்த்தனா, ஒரே விசயத்த மறுபடி மறுபடி என்னால சொல்ல முடியாது, தேவையில்லாத சிந்தனைகள தூக்கி எறிஞ்சுருங்க, இத்தனை ஆளுமையோட இருக்கிற நீங்க உங்க திறமைய மென்மேலும் பெருக்கிகனும், மிக உயர்ந்த நிலைக்கு வரணும்! கடந்த காலத்தில நடந்த தேவையில்லாத விசயத்தை எதையும் யோசிக்காதீங்க முடிஞ்சதெல்லாமே முடிஞ்சதாவே இருக்கட்டும்!”

“எல்லாமே இப்போதான் ஆரம்பிக்குது மாறன்!”

“எதுங்க?, நீங்க நினைச்சிருந்தா அது எதுவுமே நடக்க விடாம பன்னிருக்கலாம், அன்னிக்கு நீங்க விஸ்வம் சாரோட பொண்ணுனு சொல்லிருந்தீங்கன்னா, அவ்வளவு பெரிய விசயம் நடக்காம தடுத்திருக்கலாம், உங்கள பெரும் ஆபத்தில இருந்து காப்பாத்தினதுக்கு என்னோட லைஃப்ப சிக்கலாக்கிட்டீங்க இல்லையா?”

“மாறன் நீங்க மட்டும் தனியா சிக்கல, நானும் தான் உங்களோட சிக்கி இருக்கேன், ஆனா உங்கள மாதிரி வெருப்போட இல்ல விருப்பத்தோட, அப்புறம் நீங்களே சொல்றீங்க நடந்த எதுவும் சின்ன விசயமில்லனு, அதுவாவது உங்களுக்கு புரியுதே, தேங்கஸ்! என்னால ஏழ்மையிலும் வாழமுடியும்னு காட்டுறேன், தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்க்” கூறிவிட்டு விருவிருவென  அறையைவிட்டு வெளியேறினாள். வெகுநேரம் அவள் சென்ற திக்கையே வெறித்துகொண்டிருந்தான் இளமாறன்.

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1120}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.