(Reading time: 29 - 57 minutes)

ன்று காலையில் ஆதித் எழுந்ததும் நேற்று தன் அம்மாவிடம் கொடுப்பதற்கு எடுத்து வைத்திருந்த அந்த ஒன்றேகால்கோடி ரூபாய் செக்கை எடுத்து சரிபார்த்து மேஜையில் வைத்தவன் பின் காலைக் கடன்களை முடித்து வெளியில் வந்து உடையுடுத்தி கண்ணாடி முன் நின்றவனின் மனம் நேற்று தான் மீட்டிங்கில் இருக்கும் போது, விடாது போன் செய்த வர்சாவை நினைத்தபடி முகத்தில் ஓர் சிரிப்பைய் உதிர்த்தவன், “யப்பா! பிஸ்னசை ஹேண்டில் பண்ணுவதை விட இவளை சமாளிக்கறது தான் பெரிய விசயமாக இருக்கு” என்று வாய்விட்டே கூறினான்.

பின், இப்போ அவளுக்கு போன் செய்யவில்லை என்றால் பிசியா இருக்கும் போது தொந்தரவு பண்ணுவா என்று நினைத்தபடி தனது மொபைலை எடுத்து அவளை அழைத்தான்.

தூக்க கலக்கத்துடன் போனை எடுத்த வர்ஷா சோம்பல் கலையாத குரலில் போனில் குட் மார்னிங் ஆதித்.என்றதும் ஆதித் தனது முத்தத்தை இச்.... என்று அழுத்தமாக போனில் அவளுக்கு கடத்தியவன், “ஸ்வீட் மார்னிங் பேபி”! என்றான் .என்ன நீங்க நான் நேற்று அத்தனை தடவை போன் செய்தும் பிசி... பிசி.. என்று சொல்லி நான் சொல்லவருவதை கேட்காமல் வைத்துவிட்டு இப்பொழுது மட்டும் என்ன கொஞ்சல்... என்று கேட்டாள்.

நீ கால் பண்ணும் போது ஒரு முக்கியமான் மீட்டிங்கில் இருந்தேன். அதனால் தான் பேச முடியல பேபி என்று பொறுமையாக அவளிடம் பேச நினைத்தாலும் அவனது குரலில் எரிச்சலின் சாயல் எட்டிப்பார்த்தது.

நேற்று ஆதித் தன்னிடம் சரியாகப் பேசவில்லை என்று கோபத்தில் இருந்த வர்ஷாவிற்கு இன்று காலையிலேயே அவன் அழைத்து பேசவும் கொஞ்சம் தனிந்திருந்தது

ஆனால் அவனின் பொறுமை இழந்து பேசும் குரலின் அடையாளம் கண்டு கொண்ட வர்ஷாவால் மட்டுப்படுத்த முடியாமல், நேற்றைய கோபம் வார்த்தையால் வெளிப்பட்டது.

ஆக்சுவலா நான்தான் உங்க மேல எரிச்சல் படனும் ஆதித். பட், நீங்க ஏன் எரிச்சல்படுகிறீர்கள்...? என்ன அதுக்குள்ள நான் உங்களுக்குப் போர் அடித்துவிட்டேனா..? அவ்வளவு கஷ்ட்டப்பட்டு ஒன்றும் நீங்க என்னிடம் பேச வேண்டாம் என்றாள்.

அவள் டென்சனானதும் யேய்...! வர்ஷா காலையிலேயே மூட் அவுட் பண்ணாத..! நான் நல்ல படியா உன் கூட பேசி உன்னை கூல் பன்னத்தான் இப்போ போன் பண்ணினேன், நீயும் தான் கொஞ்சம் என்னை புரிந்து நடக்க ட்ரை பண்ணு வர்ஷா. நான் பிசியா இருக்கேன்னு சொன்ன பிறகும் நேற்று திருமத் திரும்ப போன் பண்ணின, அதை ஞாபகப் படுத்துனா எரிச்சல் வராதா...? ஓகே பேபி, இப்போ சொல் நேற்று எதற்கு எனக்கு போன் பண்ணின என்று கேட்டான் ஆதித்.

ஆதித் சிங்கம் போன்றவன். யாரிடமும் இதுவரை அவன் தனிந்து பேசியதில்லை. அவனுக்கு ஏற்ப மற்றவர்களை ஆட்டுவிப்பவன். ஏனோ வர்ஷவிடம் இந்த அளவு அவன் இறங்கிபேசியதே அவளை அவனின் சரிபாதியாக ஆக்க நினைத்ததினால் தான்.

அவனின் குணம் வர்ஷாவிற்கு இத்தனை நாள் பழக்கத்தில் அறிந்ததுதான் இருந்தாலும் அவளும் இதுவரை யாரையும் அனுசரித்து நடக்கும் பழக்கம் இல்லை. ஆதலால் ஆதித்தின் அடக்குமுறை மனதின் ஒருபுறத்தை சிலிர்த்து எழவைத்தாலும் காதல் கொண்டுள்ள மற்றொரு புறம் அவனுக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ய வைத்தது வர்ஷவை .

எனவே தனது கோபத்தை தற்செயலாக ஒத்திப்போட்டவள், கொஞ்சும் குரலில் ஆதித்...நேற்று ரோஸி சொன்னா, xxxமாலில் உள்ள டைமண்ட் ஷோ ரூமில் லேடஸ்ட் கலக்ஸன்ஸ் வந்திருக்குதாம் அவளுக்கு முன் அதில் உள்ள பெஸ்ட் ஐ நான் வாங்கனும் என்று நினைத்தேன் அது தான் நீங்க போன் கூட பேசமுடியாமல் இருந்தீங்களே! பிறகு எப்படி என் கூட ஷாப்பிங் உங்களால் வரமுடியும் என்று தான் அவளுக்கு முன் வாங்க முடியாத ஏக்கத்தை குரலில் வழியவிட்டபடி அவனிடம் கூறினாள்.

அவளில் ஏக்கத்தை போக்கும் விதமாக, என்னோட பேபி எதுக்கும் ஏங்க கூடாது. டுமாரோ ஆப்டர்நூன் நான் ப்ரீ தான் அப்போ போகலாம் ரோஸி வாங்குவதை விட பெஸ்ட்டாக நான் உனக்கு வாங்கிக் கொடுக்கிறேன் அப்படி வாங்கி கொடுத்தால் என்னை ஸ்பெசலாக கவனிக்கணும் என்று ஹஸ்கி வாய்சில் அவளிடம் கூறினான்.

நோ... ஆதித் ஒன்லி கிஸ் மட்டும் தான். வேற எக்ஸ்படேசன் வச்சுகிடாதீங்க ஆதித். அப்படி நிறைய எதிர்பார்த்தா எனக்கு நம் கல்யாணத்துக்குப் பிறகே நீங்க வாங்கி கொடுங்க என்றாள்.

அவனிடம் பதில் இலாது அமைதியாக இருந்த போனை பார்த்து தான் கூறியது அவனை கோபப்படுத்திவிட்டதோ..? என நினைத்தவள் அவனை சமாதானபடுத்தும் நோக்கத்துடன்

ஸ்வீட் டார்லிங்ல கோபமா, பதிலே காணோம். நான் அல்ரா மாடனாக இருந்தாலும் சில விசயங்களில் நீங்க எப்படி இப்படித்தான் இருக்கணும் என்று விடாப்பிடியாக் இருகிறீர்களோ அதோ போல் இந்த விசயத்தில் கல்யாணம் முன் ஓர் லிமிட் வரைதான் அல்லோ பண்ணுவேன். நான் இப்படித்தான் ஆதித் உங்களால் வெய்ட் பண்ண முடியாட்டி உடனே நம்ம மேரேஜ்சிற்கு ஏற்பாடு செய்யுங்க என்றால் வர்ஷா.

வர்ஷா, ஆதித் எல்லை தாண்ட நினைக்கும் போது எல்லாம் கல்யாணத்தை பற்றி பேசி அவனுக்கு தடை விதித்து விடுவாள். ஏனோ! அவன் அவளிடம் காதல்கொள்வதில் இருந்த வேகம் கல்யாணம் என்று வருகையில் குறைவது போல் அவளுக்குப்பட்டது .அது அவளுக்கு கொஞ்சம் சஞ்சலத்தை கொடுத்திருந்தது மேலும் அவளின் மேல் அவன் காண்பிக்கும் அடக்குமுறை வேறு அவளுக்குள் கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தியிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.