ஏனெனின் எப்பொழுதும் வந்தவுடனேயே காரை அதன் செட்டில் நிறுத்தி சுற்றிலும் உள்ள தோட்டத்தையும் மற்ற இடங்களையும் பார்வையிட்டு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்பதனை கண்காணித்து ஏதாவது கொஞ்சம் சரியில்லாமல் இருந்தால் வேலையாட்களை ஓர் பார்வையிலேயே அதனை சரிசெய்ய வைத்துவிட்டு பின்புதான் அவனின் அறைக்கு செல்வான்.
ஆனால் இன்று எதையும் கண்டுகொள்ளாமல் காரை அப்படியே விட்டுச் செல்லும் தன முதலாளியை பார்த்தவன் அதிசயப்படாமல் என்ன செய்வான்?.
தனது அறைக்கு வந்தவன் அங்கிருந்த பிரிட்ஜில் இருந்து மதுவை எடுத்தான் அவனின் மனம் தனிமையை வெறுத்தது அப்பொழுது அவன் கண்களுக்குள் தெரிந்தால் வர்ஷா. அவன் உதடு அவனை அறியாமல் பேபி ஐ நீட் யுவர் கம்பேனியன்,
ஆனா நீ இப்போ உன்னை எனக்கு கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டய்யலவா? , சோ ஐ வில் டேக் இட் என்று மது பாட்டிலை எடுத்தவன் அதனை கோப்பையில் கூட விடாமல் அப்படியே தொடையில் சரித்தான். பழைய நினைவுகளில் இருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ளவேண்டும் என முயன்றான்
ஆனால் அந்தோ பரிதாபம் உள்ளே சென்ற மது அவனுக்கு மயக்கத்தை தராமல் தனிமையில் பழையநினைவுகளையே... அசை போட வைத்தது.
மதுவின் போதையால் அவன் வாய் தன அம்மாவிடம் பேசுவதுபோல் புலம்பியது. .அம்மா நான் உங்கட்ட சும்மா சொன்னேன் நீங்க எனக்கு கொடுத்த பணத்தை நான் உங்களுக்கு திரும்பிக்கொடுக்கணும் என்று நினைக்கவே இல்லை ஆனால் உங்க புருசனின் மூத்த மகன் அவன் பேர் என்ன......ம்.....மாதேஷ் அவனை திரும்ப இங்க பார்த்த பிறகு கொஞ்ச காலமாய் நான் மறந்திருந்த அவனின் வார்த்தைகள் திரும்ப ஞாபகம் வந்து என்னை கொல்லுதே என்றவனின் எண்ணம் பின்னோக்கிச்சென்றது.....
----தொடரும்----
{kunena_discuss:1144}