(Reading time: 26 - 52 minutes)

திக்கு ஒரு போன் கால் வந்ததாம், அவர் அவசரமாக கிளம்பி போனாராம் அதன் பின் யாரும் ஆதியை பார்க்கவில்லை... அண்ட் ஆதி யாருடனும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை காலி பண்ணி சென்றுவிட்டார் ன்னு சிலர் சொல்றாங்க”

“அவங்களுக்கு எப்படி ஆதி வீட்டை காலி பண்ணிட்டாங்கன்னு தெரியும்?” - அமுதா

“ஹவுஸ் ஒவ்னர் சொன்னாருன்னு சொல்றாங்க” - மகேன்

“ஒன்னும் புரியல” - சித்ரா

“பொறுமை சிஸ்டர் சீக்கிரம் நம் கேள்வி அனைத்துக்கும் பதில் கிடைக்கும்...” மகேன்.

“அடுத்து என்ன பண்ணாலாம்ன்னு இருக்கிங்க?” – சித்ரா

“ஒரு நல்ல மனநல டாக்டரை பார்க்கனும்” – ரூபன் கடுப்புடன் சொல்ல

வினிதா ஏதும் யோசிக்கமால் உடனே சரி சொல்ல மற்றவர்கள் இவளை கேள்வியாக பார்த்தனர்.

“என்னால இப்படியே இருக்க முடியாது.. இன்னும் கொஞ்ச நாளில் எனக்கு பைத்தியமே பிடித்துவிடும் போல இருக்க.. ஒரு சில நேரத்தில் நடந்ததை யோசித்து பார்த்தால் இது எல்லாம் உண்மையான்னு தோணுது.. எது நிஜம் எது பொய்ன்னு தெரியல.. அதே நேரத்துல இது எல்லாம் கற்பனையோன்னு தோணுது.. எதை பார்த்தாலும் எனக்கு பயமா இருக்கு.. என்னால் இனி இப்படி இருக்க முடியாது..” கோவமாக சொல்ல ஆரம்பித்தவள் இறுதியாக இயலாமையில் முடித்தாள்.

சித்ரா ஆதரவாக வினிதாவின் கையை பிடித்துக் கொண்டாள். அதன் பின் யாரும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க, ரூபன் மருத்துவரின் அப்பாய்மண்ட் வாங்கிய பின்னர் இவளை தொடர்பு கொள்ளுவதாக சொன்னான்.

அதன் பின் என்னதான் அவர்கள் அனைவரும் ஆதியை பற்றி பேசினாலும் சித்ராவும் மகேனும் வினிதாவை பார்வையால் தொடர்ந்தனர்.

அனைவரும் அங்கிருந்து கிளம்ப இருக்கயில், மகேன் தான் மருத்துவரை பார்க்க வேண்டும் சொல்ல எல்லோரும் மீண்டும் ICUக்கு சென்றனர்.

மகேன் அங்கு இருந்த மருத்துவரை அணுகி ஆதியின் உடல் நிலையை குறித்து தன்னிடம்  தெரிவுக்கும்படி கேட்டுக் கொண்டான்.

அவன் மருத்துவரிடம் பேசிக் கொண்டிருக்க, வினிதா மட்டும் ஆதி இருக்கும் அறைக்குள் சென்றாள்.

மகேனுக்கு வினிதாவிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்தது, அவளின் பார்வை ஒரு இடத்தில் நிலைக்காமல் இங்கும் அங்கும் அலைப்பாய்ந்தது. மேலும் அவளின் முக மாற்றங்கள் சித்ராவை அச்சுறுத்தின.

மகேனுக்கு வினிதாவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாய் ரூபன் அப்பாவிடம் அழைத்து செல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

பாவம் அவன் அறியவில்லை அவரே வினிதாவை தேடி வருவார் என்று!

வெண்ணிலா அப்பார்ட்மண்ட்

வீட்டிற்கும வரும் வழி முழுக்க அமைதியாக வந்தவள் வீட்டுக்குள் நுழைத்ததும் அவளின் அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டாள்.

அனிதா வேலை முடிந்து வரும் வரைக்கும் சித்ரா வினிதாவின் ரூம் பக்கம் செல்லவில்லை. அவளின் ரூமை பார்த்த படியே அவள் இரவு உணவையும் தயாரித்து முடித்தாள்.

அனிதா வந்த பின்னர் அன்று நடந்ததை சொல்லி முடிக்க

“அப்போ வினி சைக்கியாட்ரிஸ்ட் டாக்டரை பார்க்க போறாளா?” என்றாள்.

“தெரியல.. இப்போ எல்லாம் அப்பப்போ மாறி இருக்கறா.. சோ எனக்கும் தெரியல இவ அடுத்து என்ன பண்ண போறான்னு… நீ ஃப்ரெஷ் அப் பண்ணிட்டு வா.. நான் வினிதாவையும் சாப்பிட கூப்பிடுறேன்…”

சித்ரா அவளின் அறை கதவை தட்ட அது திறந்துக் கொண்டது. தயக்கதுடன் உள்ளே சென்று பார்க்க ஆள் அரவம் இன்றி அமைதியாக இருந்தது. அவள் செல்போன்க்கு அழைக்க அது வினிதாவின் அறையில் தான் இருக்கிறேன் என பாட்டு பாடியது.

அந்த சிறிய வீட்டில் வினிதா இல்லாததை உணர்ந்த சித்ராவும் அனிதாவும் உடனே அமுதாவை தேடி போக,  மூவரும் அந்த அபார்டமண்ட் முழுவதும் அவளை தேடி பார்த்து அங்கே இருக்கும் செக்கியூரிட்டியிடம் கேட்டும் விட்டனர். வினிதா அபார்டமண்ட் விட்டு வெளியே செல்லவில்லை என சொல்லிவிட்டார்.

எங்கு சென்றாள் அவள்? யாருக்கும் தெரியவில்லை. நாளை அவள் ஊருக்கு செல்ல வேண்டும். அவளின் பொருட்கள் அனைத்தும் அவளின் ரூமில் இருக்க இவள் மட்டும் எங்கே சென்றாள் தெரியாமல் குழம்பினர்.

அன்று இரவு அமுதா சித்ராவுடன்  தங்கி விட, இரவு முழுக்க மூவரும் உறங்காமல் வாசலை பார்த்தபடி இருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.