“வந்து ரொம்ப நேரம் ஆச்சா? சாரி வினிதாவை ஏற்றிட்டு வருவதற்கு லேட்டாச்சு “ என்றான் ரூபன், வினிதாவை குறைகூறும் தொனியில்.
“என்ன வினிதாவை நீ பிக்கப் பண்ணியா?” அதிர்ச்சியில் கேட்க
“என்னடா உனக்கு கண்ணு தெரியவில்லையா? என் பின்னால் அமர்ந்து இருப்பவளை பார்த்துக் கொண்டே இப்படி கேட்குற”
“ரூபன் என்ன விளையாட்டு இது. உன் பின்னால் யாரும் இல்ல.இங்க பார் வினிதா காரில் தூங்கிக் கொண்டு இருக்காள்.” என்றான் மகேன்.
எட்டி காரினுள் பார்க்கையில் அங்கே வினிதா அனிதாவின் தோளில் சாய்ந்து தூங்கி கொண்டுயிருந்தாள்!
அவனின் பின்னால் திரும்பி பார்க்க அங்க யாரும் இல்லாமல் இருக்க, அவன் திரும்பி காரை பார்க்கும் போது அவன் கண் எதிர்ச்சையாக பைக்கின் கண்ணாடியை பார்க்க. அதில் ரத்தமென சிவந்த இரு விழிகள் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தது!!!
அது கொஞ்ச கொஞ்சமாக மறைந்து தெளிவற்ற முகம் ஒன்று தோன்றி அவனை பார்த்து சிரித்தது.!!!!
ரூபன் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் வினிதாவிற்கு சிகிச்சை முடித்துவிட்டது. அங்கு என்ன நடந்தது என்பதை அவன் அறியவில்லை. அவன் இன்னும் தன் பின்னால் வந்தது யார் என்ற கேள்வியையே தனக்குள் கேட்டுக் கொண்டிருந்தான்.
டாக்டாரிடம் வினிதா சகஜமாக பேசிதையும் அவளுக்கு கடந்த சில நாட்களாக மிகவும் கலைப்பாக இருப்பதை சொன்னதை கூட ரூபனால் உணர முடியவில்லை.
அவனின் மனக் கண்ணில் தெளிவற்ற முகமும் சிரிப்பும் தோன்றி மறைந்துக் கொண்டு இருந்தது.!!!!
தொடரும் நிழல்
{kunena_discuss:753}