(Reading time: 30 - 60 minutes)

“நீ இங்கதானே இருந்த! அப்புறம் என்ன நடக்குதுனு தெரியலைனு சொல்ற.. சரியான தத்திடா நீ” ஜெய் மற்றும் சரயூவிடம் பார்வையை பதித்திருந்தவள் தலையில் அடித்து கொண்டாள்.

ரூபினை தத்தி என்று சொன்னதற்கு காரமாக ஏதாவது சொல்லுவானென்று எதிர்பார்த்தவளுக்கு அவனின் அமைதி உறுத்த, பார்வையை இவனிடமாக திருப்பினாள்.

ரூபின் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவள்,

“எதுக்குடா இப்படி பாக்குற? நான் என்ன கேட்ட? நீ என்ன செய்திட்டிருக்க?”

“ம்ம்ம்…” ஒரு பெருமூச்சை வெளியிட்டவன், “நீயும் என்னை காதலிக்கிற! என்ன பிரயோசனம்? ஒரு முறையாவது இப்படி ஏதாவது உண்டா?” என்றவனின் பார்வை ஜெய்யைத் தீண்டி இவளிடமே திரும்பியது.

“இங்க என்ன நடக்குதுனு கேட்டா… என்னடா, கண்டதும் உளறிக்கிட்டு.. நான் வேதிக்கை கேக்குற”

“இங்க நடக்குறதை தானே சொன்ன” என்ற ரூபினின் வார்த்தைகளை அசட்டை செய்தவள், வேதிக்கிடம் நகர்ந்தாள்.

‘இவனும் மரம் மாதிரி நிக்குறானே!’

“வேதிக், என்னாச்சு? இங்க என்ன நடக்குதுனு உனக்காவது தெரியுமா?”

“நீ எப்போ வந்த சௌம்யா? இங்க என்ன நடக்குதுனு ஒன்னும் புரியல”

‘நீயுமா!’ என்பதாக அவனை நோக்கியவள்,

“சரி விடுங்க! நானே தெரிஞ்சிக்குற”

கம்மலின் தீர்வு சரயூக்கு பிடிக்குமென நிச்சயமாக தெரியும் அவனுக்கு.  அதை பார்த்ததும் என்ன பேசுவாள்? எப்படி உணருவாள்? அதை எப்படி வெளிபடுத்துவாள் என்று பலவாறு கற்பனை செய்திருந்தான்.   ஆனால் இவளின் இந்த அணைப்பு! அவன் சற்றும் எதிர்ப்பாராதது.

ஆனந்த அதிர்ச்சியில் உறைந்திருந்தான் ஜெய்.  அவளின் நெருக்கம் அவனுள் பல மாறுதல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.  தூண்டிவிடப் பட்ட குதிரையின் வேகத்தை மிஞ்சிக் கொண்டிருந்தது அவனின் இருதயத் துடிப்பு. 

இன்னும் என்ன யோசனை, ஜெய்?! சரூட்ட உன்னோட காதலை சொல்லிடு.  இல்லயா…. கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்து! தொடுகையால காதலை அவளுக்கு உணர்த்து என்று மனது ஜெய்யை தூண்டியது.

அவளின் நெருக்கத்தினால் தன்னுள் முதன் முறையாக ஏற்பட்ட புதுவித அனுபவித்தில் மயங்கி கொண்டிருந்த மனமும், அது சொன்ன அறிவுரையையும் ஏற்று அவளை அணைக்கும் வேகத்தில் கைகள் உயர்ந்தன. 

மூளையோ அது தவறென தடுத்து கைகளை கீழிறக்கியது.

இதை விட அருமையான சந்தர்ப்பம் கிடைக்காது, ஜெய்.  நான் சொல்றத கேளு! என்று மனது சொல்லவும் மறுபடியும் கைகள் உயர்ந்தன.

“ஹாய் சரயூ!” உரக்க கேட்ட சொம்யாவின் குரல், ஜெய்யைக் கலைத்தது.

சற்றே மேலெழுந்திருந்த கைகளை அப்படியே அடக்கிக் கீழிறக்கினான்.

சௌம்யாவிடம் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் அவசரத்தில் ஜெய்யின் உயரத்திற்கு, இத்தனை நேரமாக அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்கியிருந்ததை உணராமல் கைகளை எடுக்கவும் நிலைத் தடுமாறினாள். 

அனிச்சை செயலாக ஜெய்யின் தோளைப் பிடித்தாள்.  தனக்குள் இத்தனை நேரமாக நடந்த போராட்டத்தை மறந்து அவளை இடையோடு தாங்கினான்.

“சஞ்சய், இன்னைக்கு யாரு முகத்துல முழிச்சானோ! அதிரிஷ்டதுக்கு மேல அதிரிஷ்டமா அடிக்குது!” அருகிலிருந்த சௌம்யாவை பார்த்து பெருமூச்சு விட்டவன் “கொடுத்து வச்சவ! லவ்வ சொல்லாமலே ரொமான்ஸ் பண்றான்.  நாங்கெல்லா என்ன சொல்லி, என்ன ஆச்சு?!”

தன் இடது கை உணர்ந்த அவளின் மென்மையில், கட்டுப்பாட்டை தகர்த்தெரிந்த காளையாக சீறியது உணர்ச்சி.  அந்த மென்மையின் ஆழத்தை அறிந்து கொள்ளும் அவசரம் உடலெங்கும் பரவியது.

அவன் நிலையை அறியாதவளோ, தன்னை விழாமல் தாங்கியதற்காக நன்றி தெரிவித்தாள், மலர்ந்த புன்னகையோடு.

“தாங்க் யூ சஞ்சு!” என்றபடி இடது கையால் அவன் சட்டையைப் பிடித்து எழுந்து கொள்ள முயன்றாள்.

உணர்ச்சிகளின் தாக்கத்தில் தத்தளித்து கொண்டிருந்தனுக்கு அவளின் புன்னகை இதழ்கள் கிறக்கத்தைக் கொடுத்தன.  காதல் மயக்கத்திலிருந்தவனுக்கு அவள் தன்னிடமிருந்து விடுபட முயல்வது புரியவில்லை.

அடுத்த முயற்சியாக அவன் தோளை அழுத்தி, எழுந்து கொள்ள முயன்றாள்.  அவள் எழுவதற்கு எந்த வித ஒத்துழைப்பும் கொடுக்காமலிருந்த ஜெய்யை கவனித்தான் ரூபின்.

அவசரமாக அவனை நெருங்கி,

“மச்சா! சரயூவை விழாம தாங்கினா மட்டும் போதாது.  எப்படி எழுப்பி நிறுத்தனும்னு தெரியனும்” ஜெய்யின் இடது கையை, சரயூ எழுவதற்கு வசதியாக உயர்த்திக் கொண்டே “சௌமி! சரயூக்கு கைக்கொடுத்து ஹெல்ப் பண்ணு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.