நடந்திட்டிருந்தா 'டர்ட்டி ராஸ்கல்! தூங்கலாம்னு வந்தாக்கா விளக்கெப் போட்டுட்டு உக்காந்து கதெ எழுதறாளாம் கதெ! பெரிய எழுத்தாளி ஆயிட்டாப்போல நினெப்பு! பேச்சுக்குப் பேச்சு எவ்வளவு கர்வம்!' சொற்கள் கேட்டன.
'நியாயமானாலும் அநியாயமானாலும் அதிகாரம் பண்ணிப் பழக்கப்பட்ட ஆம்பளெ, பொம்பளெ வாயெத் தெறந்து பதில் சொன்னா சகிக்க மாட்டான். தன்னெயே நம்பி வாழற மனெவி மக்களெச் சுகப்படவெக்க முடியாத பரோபகாரி போலி சிநேகிதங்களுக்காக எல்லாத்தையும் தொலச்சித் தீப்பான். தெரு வெளக்கு எரியவெச்சி வீண் செலவு பண்ணாத சிக்கன சிகாமணி பொழுது போக்குக்காக நூறு நூறாச் செலவு பண்ணுவான். தான் நினெச்சதே நினெப்பு! தான் செய்யற்தே பெரிய காரியம்! தான் சொல்றதே நியாயம்! தான் வெச்சதே சட்டம்! இப்பொ சொல்லு. எந்த நிலையெப் பாத்து மத்தவங்க சந்தர்ப்பங்களெப் புரிஞ்சிக்கற்து சொல்லு?"
மெய்மறந்து கேட்டுக்கொண் டிருந்த நான், பானுவின் குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பு, பற்று தவிர வேறொரு மனநிலை இருக்கும் என்று எண்ணிப்பார்க்காத நான், ஓரளவு உண்மையைத் தெரிந்துகொண்ட அந்தச் சமயத்துல் என்ன சொல்வேன்? ஒன்றும் பேசமுடியாமல் வாயடைத்து இருந்துவிட்டேன் .பானுவின் இதயத்தில் கணவன்மீது, ஆண்களின்மீது எவ்வளவு சினம்! வெறுப்பு!
நான் கூறினேன்: "பானூ! நீ சொல்றதெ நான் புரிஞ்சிக்காம இல்லெ. ஒரு விஷயம் கேக்கறியா? நம் ஆசெங்க, நம்பிக்கெங்க, விருப்பங்க, மனப் பற்றுகளெ ஒரு நிமிஷம் அப்படி வை. மாமா சின்னப்போ திலிருந்து கேள்வி முறெ இல்லாம, யாருடைய கட்டுக் காவல் இல்லாம இஷ்டப்படி யெல்லாம் திரிஞ்சி வளர்ந்த மனுஷன் அவர் என்ன நினெச்சாலும் அது நடந்தே தீரணுங்கற பிடிவாதம்! அது முரட்டுத்தன மானாலும், முட்டாள்தன மானாலும் எதுவானாலும் ஒண்ணுதான். அர்த்தமில்லாத சுதந்திரம், மனுஷனெ எத்;தனெ கெட்ட பழக்கங்களுக்குக் கொண்டுபோய் விடுதோ உன்னால் கிரகிக்க முடியாதா? நீ..."
"கொஞ்சம் நிறுத்து! கல்யாணத்துக்கு முந்தி மாமா வெப்பத்திச் சொன்னேனே, அப்பொ உனக்கு இந்தச் சந்தேகம் வரல்லியா? அப்படித் தறுதலையா வளர்ந்த மனுஷனிடம் கெட்ட பழக்கங்களும் சேர்ந்திருக்கும்னு அப்பொ நீ எனக்குச் சொல்லி இருந்தா, அண்ணா..."