பன்னிரண்டு கடந்தது. "பசி யெடுக்குது பானூ!" என்றேன்.
பானு சட்டென்று எழுந்து-- " பேச்சிலே உக்காந்துட்டேன், வா போலாம்! " என்றாள். பேசாமல் காரியர்களைப் பிரித்துப் பரிமாறத் தொடங்கினாள்.
எந்த வினாடி என்ன நடக்குமோ தெரியாது என்று சொல்வது இதுதான் போலும். தோட்டத்தில் ஏரிக் கரையில் ஆலமரத்தின் கீழே உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை என்னவாயிற்று!
" நீ இருந்ததனாலே ஆச்சி, இல்லேன்னா இந்த வேளெ இது இப்படியே இருந்திருக்கும்" என்றாள் பானு.
" அதுதான் தப்பு! நீ பட்டினி கிடக்கற்தோ, கண் முழிக்கற்தோ கூடாது. குறெஞ்சது நீ சாப்பிடலேங்கற்தே தெரிஞ்சிக்கறவங்க கூட இல்லே இல்லியா? பசி தீர்றதுக்கு வயித்துக்காக இவ்வளவு சாப்பிட்றதுக்கு கௌரவம் எதுக்குப் பாக்கணும்?"
"என்னவோ அண்ணா!" இந்த வீட்லெ நினெக்கறது செய்றமோ இல்லையோ, சமெக்கறது சாப்பிட்றமோ இல்லையோ தெரியாது. அதுக்குக் காரணம் அவர் ஒர்த் தரேதான்னு நான் சொல்ல மாட்டேன். நானும் ஏதோ தப்புங்க பண்ணிட்டேதான் இருக்கறேன். டிபன் வெக் கறப்பொ தண்ணி கொடுக்கற்துக்கு மறந்து போறேன். ஒவ்வொரு தடவெ சக்கரெ போடாமலேயே காபி கலந்து கொடுத்துட்றேன். மோர்க் கிண்ணத்தலெ கொஞ்சம் உப்பு போடணுங்கற்து நினெப்பு வராது. இதெல்லாம் வெறும் ஞாபகமாதியினாலே நடக்கற தப்புகளாவே இருக்கலாம். ஆனா அதுகளோட விளைவு ரொம்ப தீவிரமா இருக்கும். நான் தன்னெ அலட்சியம் பண்றதாகவும், தன் வேலெங்கன்னா இஷ்டத்தோட செய்யற்தில்லேன்னும், தன் மேலே எனக்கு எந்த அளவு மதிப்பு இருந்தாலும் இப்படி அலட்சியப் படுத்திக் காரியங்கள் பண்ணமாட்டேன்னும்--அதுக்கெல்லாம் நான் ஒரு சமாதானமும் சொல்ல முடியாது. சொன்னாலும் பலனில்லெ.
தொடரும்