புரிஞ்சுக்குவார்.ஆசைக் கோட்டைகள்ளே மிதந்துகிட்டு மூணுமாசபாபுவெத் தூக்கிக்கிட்டு வந்தேன்.
மகனெப் பாத்து தகப்பன் சந்தோஷப்பட்டது உண்மெதான் - ஆனா அது எனக்குத் திருப்தி கொடுக்கறசந்தோஷ மில்லே. என் எதிர்காலம் மாறிப் போயிடும்னுநம்பற அளவு ஆனந்தமில்லே. என் வேதனை யெல்லாம்அதிகமாச்சே தவர இம்மி அளவு கூடக் குறையல்லே.அவருக்கு புது வெறுப்பு ஒண்ணு வந்து சேந்தது. 'நாள்முழுதும் பையன் அழறான். வீட்டுக்கு வர்றதுக்கேபுடிக்காம இருக்குது'ன்னு சொல்வார். ராத்ரியிலெஅவன் நெனச்ச துணியெ மாத்தவேண்டி யிருந்தா அதுநான் ஒருத்தியே செய்யணும். அவனெத் தொடச்சிவேற துணி போட்டுப் படுக்க வெக்கற்துக் குள்ளேஅவன் அழறான்.
"சீ!சீ! இது சத்தரம் மாதிரி இருக்குதே ஒழிய வீடாட்டம் இல்லே. பகலெல்லாம் ஹாயா படுத்துட்டு நடுராத்ரியிலே எழுந்து மோளம் அடிச்சிட்டு உக்காந்திருக்கறே.ராத்ரி முழுக்கத் தூங்கவிட்றதில்லே. என்னெ இருக்கச்சொல்றியா? இல்லெ போச் சொல்றியா? நீ என்னநினெச்சிக்கிட்டிருக்கறே?"
முரடனுக்கு எதுக்குப் பதில் சொல்லணும்? இதுதான்என் நினெப்பு. எவ்வளவு திட்டினாலும் சரி, கேட்டுக்கிட்டே பச்செக் குழந்தையெ மாரோடு அணெச்சிக்கிட்டுப் படுத்துக்கிட்டா ஏதோ ஒரு திருப்தி! சந்தோஷம்!போதும் - அவனுக்காக எதெயும் தாங்கிக்குவேன்.."
பானு அதே பாணியில் நினைவுவந்த தொல்லைகளைஎல்லாம் சொல்லிக்கொண்டு வந்தாள். கேட்கக் கேட்கஎனக்குப் பைத்தியம் பிடிக்கும்போல் இருந்தது. பானுவின் குடும்ப வாழ்க்கை இவ்வளவு கீழ்த்தரமாகவாநடந்து கொண்டிருக்கிறது? பானு இவ்வளவு வேதனையைத் தாங்கிவருகிறாளா?
"அண்ணா! என் கஷ்ட சுகங்களுக்கு என் புருஷன்இருக்கறார் என்ற நம்பிக்கெ என்னெக்கோ போயிட்டது.ஆனா அவருக்குப் பாபு மேலெ அன்பு இருந்தா லாவதுஎனக்குத் திருப்தியா இருக்கும்."
"பானூ!" ஈரம் படர்ந்த அந்தக் கண்களை உற்றுப்பார்க்க லானேன். பானு பேசவில்லை.
"நீ ரொம்ப மாறிட்டே பானூ!"
பானு ஒருவிதமாகச் சிரித்தாள். "மார்றதில்லேஅந்த பானு இனிமெ இல்லே. அந்த உயர்ந்த எண்ணங்க, அந்த கர்வங்க, குருட்டு நம்பிக்கைங்க, பிடிவாதங்க---ஒண்ணு மில்லே"
உண்மை யென்று சொல்வதற்காகத்தான் போலும்கடிகாரம் இரண்டு முறை அடித்தது.
"போவட்டும். கொஞ்சம் ஆறுதலா இருக்கும். ஏதாவது சினிமாக்குப் போலாமா?"
தொடரும்