பேர் ரொம்பவளரணும். எப்பவோ.... சரி இருக்கட்டும்....
இந்த மாதிரி பேச்செக் கேட்டுட்டு உக்காந்திருந்தாஉனக்கு வீண்தான்! இல்லெயா?" என்றாள் திடீரென்றுசிரித்துக்கொண்டே.
"பானூ! நீ ரொம்ப 'சில்லி'யா பேசற்துக்குக் கத்துக்கிட்டே."
"உண்மெதான், அதுதான் இப்பொ ரொம்ப தேவெயாஇருக்குது" என்று சொல்லிக்கொண்டே எழுந்துபோனாள். காபி போட்டுக் கொண்டு வந்தாள். அவள்சமையல் செய்து கொண்டிருக்கும்பொழுது நான் புத்தகம் திறந்துகொண்டு உட்கார்ந்தேன். என் கண்களுக்குஎழுத்துக்கள் ஒன்றும் தென்படவில்லை. புத்தகத்திலிருந்த எழுத்துக்கள் அப்படியே மாறி பானு பேசியசொற்களாக உருப்பெற்றுக் கொண்டிருந்தன. விக்கிவிக்கி அழுதுகொண்டிருந்த பானுவின் முகமே ஒவ்வொருபக்கத்திலும் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. எல்லாவற்றையும் என்னிடம் சொல்லி இதயத்தின் கனத்தைக்குறைத்துக் கொண்டதனால் போலும் பானு சற்றுக்கவலை குறைந்து திரிந்து வருகிறாள். ஆனால் ஒவ்வொருநாளும், ஒவ்வொரு மணியும் அனுபவிக்கும் இந்தநரகம் எப்போது முடிவடைவது? கல்வி கேள்வி,அழகு நளினம், அறிவு ஆற்றல் எல்லாம் பெற்றிருக்கிற பானு கணவனுக்குப் பிடிக்காமல் இருப்பது ஏன்? இன்பவெள்ளத்தில் மிதக்கவேண்டிய குடும்பத்தை அவர்துன்பக் கடலில் மூழ்கடிப்பது ஏன்? பானுவின் குடும்பவாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைய வேண்டுமானால் நான்செய்ய வேண்டியது என்ன? எல்லாம் கேள்விகள் தாம்!பதில்கள் இல்லை. என் அன்புக்குரிய தங்கை, உயிருக்குயிரான பானு இவ்வளவு மட்டமான வாழ்க்கை நடத்துவதை நினைக்கும்போது தோன்றும் வேதனையை மறக்கக்கூடிய சக்தி எனக்கு இல்லை.
புத்தகத்தை மூடிவிட்டுச் சிந்தித்துக் கொண்டேநடக்கத் தொடங்கினேன்.
சட்டென்று நின்று, "பானு! ஊதுவத்தி வெக்கற செடிவாங்கினேன்னு சொன்னியே, எங்கே? எங்கேயும்காணமே?" என்று கேட்டேன்.
"அய்யோ! அது இத்தனெ நாளும் இருக்குதா?எப்பவோ என் மேலே கோவம் வந்தது. அது தூள்தூளாயிட்டுது. எந்த மாதிரி பொருளானாலும் தூக்கிப்போட்டு ஒடெக்க வேண்டியதுதான்----என் கையிலெஇருந்து கப்பு நழுவி விழுந்தாதான் ஒரு போராட்டம்நடக்கும். ஆனா தனக்குத் தானே வேணும்னேஒடெச்சிப் போட்டா அதெக் கேக்கற்துக்கு யாருமில்லே.அவர் சம்பாதிக்கிறவர். எதெ ஒடெச்சாலும் மறுபடியும்வாங்கிக்குவார். நான் பாழாக்கனா எப்படி கொண்டுவருவேன்?"
பானுவுக்கு இந்த மனக் குழப்பத்தினாலே ஓரளவுகுதர்க்கமா பேசுவதுகூடப் பழக்க மாகிவிட்டது போல்இருந்தது.
தொடரும்