Page 6 of 6
கை கலந்திருப்பார்கள்.
மூர்த்தி அவசரமாக எழுந்து வெளியே போனான். ”அம்மா பவானி!" என்றார் சேஷாத்திரி.
"நீ இப்படி இந்த அறியாப் பிள்ளையை வைத்துக் கொண்டு தனியாக வாழ்வேன் என்று பிடிவாதம் பிடிப்பது சரியில்லை. நாகராஜனிடம் போய் இருப்பது தான் சிறந்தது" என்று கூறிவிட்டு வெளியே போய் விட்டார் அவர்.
சேஷாத்திரி ஏன் திடீரென்று வந்தார்? பாலுவைப் பற்றி விசாரித்துப் போக வந்தாரா? மூர்த்தி தன் வீட்டினுள் நுழைந்ததைப் பார்த்து விட்டுத்தான் தன்னை எச்சரிக்க வந்திருக்கிறார் என்பது பவானிக்குப் புரிந்து விட்டது.
சிலையைப் போல அவள் கூடத்தில் மாட்டி இருந்த நடராஜப் பெருமானின் படத்தின் முன்பு சென்று உட் கார்ந்து விட்டாள்.
--------------
தொடரும்