Page 5 of 5
கரத்தில் அட்டிகையை வைத்தார்.
இரும்புப் பீரோவைப் பூட்டியானதும், சரியாகப் பூட்டியிருக்கிறதா? என்று காமாட்சி ஒரு தடவை அழுத்திப் பார்த்தாள். ரங்கநாத முதலியாரின் சொத்தையெல்லாம் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இப் போதே வந்து விட்டது போல!
மூவரும் கீழே இறங்கிச் சென்று மாசிலாமணி தம்பதி விடை பெறும்போது "வாடகை..." என்று கணக்குப்பிள்ளை ஞாபகப்படுத்தினார். மெலிந்த குரலில், "ஆமாம், மறந்தே போய் விட்டதே. இரண்டு மாச வாடகை, இரண்டு மாத அட்வான்ஸ் ஆக, முந்நூறு ரூபாயை அனுப்பி விடுங்கள். அதை வாங்க வில்லை யென்றால் நம் கணக்குப் பிள்ளைக்குத் தூக்கமே வராது" என்றார் ரங்கநாத முதலியார்.
தலையாட்டிப் பொம்மை போல் தலையை ஆட்டி விட்டுக் கணவனும் மனைவியும் கிளம்பினர்.
----------------
தொடரும்...