உட்கார்ந்தார். இதற்குள் பவானி ஓவல்டின் கரைத்து எடுத்து வந்தாள். அதைச் சாப்பிடும் வரை பவானி கோமதியுடன் ஒன்றுமே பேசவில்லை. அவள் சாப்பிட்டு முடித்ததும் அவள் அருகில் உட்கார்ந்து "ஏன் மன்னி அண்ணா மாசத்தில் வீட்டில் எத்தனை நாளைக்கு இருப்பான்? நான் வந்ததிலிருந்து சேர்ந்தாற்போல் அவனை நாலு நாட்கள் கூட வீட்டில் பார்க்க முடியவில்லையே?" என்று கேட்டாள்.
கோமதி பவானியை ஒரு தினுசாகப் பார்த்தாள். பிறகு வறண்ட குரலில், ”ஏன் அப்படிக் கேட்கிறாய் பவானி? மாசத்துக்கு நாலைந்து நாட்களுக்கு மேல் உன் அண்ணா வீட்டில் இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அந்த சமயங்களில் அவருக்குத் தன் ' பிஸினஸ்' அலுவலா கவே பிறருடன் ' போனில் பேசுவதற்குச் சரியாக இருக்கும்" என்றாள்.
மனதில் இருந்த ஏக்கமும் வருத்தமும் அவள் குரலில் பிரதிபலித்தன. அழகுள்ள மனைவி, ஆசைக் குழந்தை, சுகவாழ்வு எதையும் கவனிக்காமல் ’வேலை வேலை' என்று எதையோ லட்சியமாக வைத்துக் கொண்டு நாகராஜன் நடந்து கொண்டான்.
இவையெல்லாமே வேடிக்கையாகவும் விசித்திர மாகவும் இருந்தன பவானிக்கு.
--------------
தொடரும்...