”ஏனப்பா! உன் குழந்தையா? என்ன பெயர் வைத்திருக்கிறாய்?" என்று கேட்டார் ஸ்ரீதரன்.
"நடராஜன் என்று பெயர். பவானி அம்மாதான் வெச்சாங்க. அந்த அம்மாவுக்கு அந்தப் பெயரிலே ஒரு பைத்தியம்."
”நல்ல பெயர்தான் அப்பா" என்று கூறிவிட்டு டாக்டர் பவானியின் வீட்டுக்குக் கிளம்பினார் பல மாதங்களுக்கு முன்பு தான் சொன்னதை நினைத்துக் கொண்டு,
நாகராஜனின் வீடு நிசப்தமாக இருந்தது. அன்று தம்பதி இருவரும் ஏதோ சினிமாவுக்குப் போயிருந்தார்கள். அதற்கு முன்பாக ஏகப்பட்ட தகராறுகள் சில்லறைச் சண்டைகள்.
"மன்னியை அழைத்துக் கொண்டு சினிமாவுக்குப் போய் விட்டு வாயேன் அண்ணா ?" என்று பவானி கோமதிக்காகப் பரிந்து பேசினாள்.
”நீதான் போயேன் மன்னியை அழைத்துக் கொண்டு. நான் ’பிஸினஸ்' விஷயமாக ஒருத்தரைப் பார்க்க வேண்டும்" என்றான் அவன்.
பவானி பக் கென்று சிரித்தாள்.
”நல்ல பிஸினஸ்! பணம் எதற்கண்ணா சம்பாதிப் பது? வாழ்க்கையை அனுபவிக்கத்-தானே?"
நாகராஜன் தன் ஈழல் நாற்காலியில் இப்படியும் அப்படியுமாக மூன்று முறைகள் சுழன்றான்.
"இப்போது நாம் என்ன பணத்தை சம்பாதித்து அனுபவிக்காமல் தான் இருக்கிறோமா! மேலே மின்சார விசிறி சுழல்கிறது. கூடத்தில் ரேடியோ பாடுகிறது. ப்ரிஜி டேடர் வாங்கிப் போட்டிருக்கிறேன். வைர நெக்லெஸ் வாங்கி இருக்கிறேன்."
"ஆமாம் இத்தனையும் வைத்துக் கொண்டு சிறை வாசம் பண்ணச் சொல்கிறீர்-களாக்கும்! நாலு இடங்களுக்குப் போய் வந்தால் தான் மனசுக்குத் தெம்பு. எங்கே, என்னைப் பார்த்துச் சொல்லுங்கள். பக்கத்தில் இருக்கிறதே வடபழனி ஆண்டவன் கோயில், ஒரு நாளாவது