(Reading time: 23 - 46 minutes)
Panithuli - Saroja Ramamoorthy
Panithuli - Saroja Ramamoorthy

   

“இந்தக் கடிதத்துக்குப் பதில் எழுதி. விட்டீர்களா?” என்று சிறிது பதட்டத்துடன் கேட்டான் சங்கரன்.

   

'ஆமாம். அவன் ஒரு மனுஷன் என்று மதித்து பதில் வேறு எழுத வேண்டுமா என்ன?" என்றார் அவர்.

   

எனக்கும் இன்று தபாலில் ஊரிலிருந்து அம்மா கடிதம் எழுதி இருக்கிறாள். எனக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணுவதற்கு ஒரே அவசரம் அவளுக்கு. பெண் ஏற்கெனவே தெரிந்த இடம். காலேஜிலே படிக்கிறாள். நான் கூட இரண்டொரு தடவைகள் பார்த்திருக்கிறேன். காமுவைப் போல் இருக்கமாட்டாள். சுமாரான அழகி தான்" என்றான் சங்கரன்.

   

"இஷ்டமிருந்தால் உன் சம்மதத்தை எழுதி விடேன் அப்பா! 'சுபஸ்ய சீக்கிரம்' என்பார்கள். சங்கரா நான் என்னவோ காமுவைப் பாழுங் கிணற்றில் தள்ளுகிற மாதிரி முத்தையாவுக்குக் கொடுக்கப் போவதில்லை. இன்னும் இரண்டொரு வருஷங்கள் ஆனாலும் பாதகமில்லை. பட்டினத்தில் உனக்குத்தெரிந்தவர்கள் எவ்வளவோ பேர்கள் இருப்பார்கள். ஐம்பது ரூபாய் சம்பாதித்தாலும் பாதக மில்லை. பையன் யோக்கியனாகவும், குணவானாகவும் இருக்க வேண்டும். ஏதாவது பார்த்து ஏற்பாடு செய்வாய் என்கிற நம்பிக்கையுடன் தான் உன்னிடம் சொல்லுகிறேன்."

   

சங்கரனின் மனம் துடித்தது, "நான். இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் உத்தேசமே இல்லை. அப்படிச் செய்து கொண்டால் காமுவையே பண்ணிக் கொண்டு விடுகிறேன்!” என்று கூறிவிட்டு நகைத்தான்.

   

பிச்சைக்காரன் ஒருவனுக்கு முழு வெள்ளி ரூபாய் கிடைத்த மாதிரியும், பஞ்சத்தில் வாடுபவனுக்குப் பால் அன்னம் கிடைத்த மாதிரியும் இருந்தது சங்கரன் கூறிய வார்த்தைகள் ராமபத்திர அய்யருக்கு.

   

'சங்கரா! இதெல்லாம் என்ன பேச்சப்பா? உன் அந்தஸ்து என்ன? உன் தகப்பனாரும் நானும் நண்பர்களாக இருந்தாலும் ஸ்ரீகிருஷ்ணனும், சுதாமனும் போல் அல்லவா எங்களுக்குள் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.