-----
ஏற்கெனவே கேசவன் மீது பொறாமை கொண்டிருந்த மற்றவர்கள் கேசவனும் பரிமளாவும் அன்பொழுக விருப்பது கண்டு ஆத்திரங் கொண்டார்கள். பரிமளவல்லியின் வீட்டிற்கு அனேக கடிதங்கள் வரத் தொடங்கின. நாடகத்தில் நடிப்போரும் இதரர்களும் அவளுடைய மோக வலையில் சிக்குண்டு தம் தம் மனம் போனபடி யெல்லாம் கடிதங்கள் மூலம் பிதற்ற வாரம்பித்தார்கள். பரிமளா கேவலம் சிறுமியாயினும் அவளுடைய அறிவு தனிச் சுடர் போலப் பிரகாசிக்கின்ற-தாகையினால் இக் கடிதங்கள் அவளுடைய மனத்தைப் புண் படுத்தின. "தினந்தோறும் தபால்காரன் தன் வீட்டிற்கு வராது போகக் கூடாதா?" என்று எண்ணுவாள். அவளுடைய இவ் வேதனையை யாரிடம் வெளியிடுவது" என்று ஏங்கி அஞ்சி சில நாள் வாளா விருந்தாள்.
பரிமளாவுடன் நடிப்பதில் நான்நீ என்று போட்டிகளும் உண்டாகும். பரிமளா ஒருத்தியே அங்கு பெண்பாலாதலால் மற்றைய பெண் வேடங்கள் தாங்குவ-தெல்லாம் ஆண் பிள்ளைகளே யாவர். பரிமளாவின் தாயாகவும், தோழியாகவும் பலவிதமான நடிகர்களாகத் தோன்றுவோரிடத்திலும் பரிமளா நெருங்கி நடிக்காமல் தன்னுடைய மனத்திலடங்கியுள்ள வெறுப்புடன் விலகியே நடிப்பாள்.
அவ்வாறான காலங்களில்தான் பரிமளாவின் மனத்தில் அபூர்வமான ஓர் அறிவு உதய மாயிற்று. அது யாதெனில் "நான் ஒர் நாடகமாதாக இருக்கிறேனே" என்கிற ஓர் ஏக்கமே. அவ்வாறு உதயமானதோடு தான் தினம் நடிக்கும் உயரிய நாடகங்களின் வேடத்துப் பாத்திரத்தைப் போல தான் உண்மையிலேயே கற்புடனும் நீதியுடனும் ஒழுக வேண்டும். தான் நடிப்பது பிறர் கண்டு புத்தி பெறுவதற்காகவன்றோ? அந்த உண்மை தன் நடத்தையிலும் சாவித்திரி, சீதை, வள்ளி, தமயந்தி, அனுசூயை முதலியவர்களைப் போல இருக்க வேண்டும் என்ற ஓர் தீவிரமான எண்ணம் உதித்து விட்டது.
-----
அங்ஙனம் உதித்த எண்ணத்தினால் அவள் அந்த விஷயத்திலேயே இரவு பகலாக மனத்தைச்