(Reading time: 21 - 42 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

கேட்டாள் :

   

"என்ன வேணும்?”

   

"இளங்கோ சார்."

   

"இளங்கோ சார்ன்னு யாருக்கும் பேரு கிடையாது. எஸ். இளங்கோ, ஜி. இளங்கோ, எல். இளங்கோவன், இதுல யாரு வேணும்?"

   

"நானு அடிச்சுப் போட்டேனே?”

   

“என்ன ஒளறுறே?"

   

'இளங்கோ, அதுதான், அறியாத புள்ளாண்டான்; பதினைந்து நாளா ஆசுபத்திரியில பேஜாரு பட்டவரு. எனிக்கி வேல போட்டுத் தாரேன்னார்.”

   

"நீயும் ஒன் தமிழும். கேஷுவலா? உட்காரு."

   

"அது வந்திருக்குதா?"

   

"எனக்கு ஜோசியமா தெரியும்? உட்காருன்னா உட்காரு. இல்லாட்டி நடையக்கட்டு."

   

வரவேற்புக்காரி வாட்டசாட்டமானவள். அங்கே வருகிறவர்களை குசலம் விசாரித்து, அவர்களது உறவையே முதலீடாக்கி நான்கைந்து டாக்சிகளை விட்டிருப்பதாகக் கேள்வி. இவள் தேறாதவள் என்பதால் அலட்சியமாக அடிக்கடி டெலிபோனில் பேசிப்பேசி அங்கேயிருந்தவர்களை ஏலத்தில் கூப்பிடுவதுபோல் கூப்பிட்டாள். சரோசா என்ற வார்த்தை வாயில் வரவில்லை. இதற்குள், சரோசா படியமாட்டாள் என்பதைப் புரிந்து கொண்ட மீசைக்காரன், வரவேற்புக்காரியின் காதில் உதடுகள் படும்படி கிசுகிசுத்தான். ஒருமணி நேரத்திற்கும்மேல், சரோசாவுக்கு, காலம் காலன் போல் கடந்தது.

   

சரோசா மீண்டும் அங்கே போனாள். 'தத்தேறி முண்ட, அது வந்திருக்கா, வரலியான்னாவது 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.