(Reading time: 31 - 62 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

ஸோமே : (வாங்கிக் கொண்டு) ஸ்திரீயே இந்த உபகாரத்தை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். இனி எங்களுக்கு என்ன குறைவு இருக்கிறது?

   

மாத : ஸோமேசா! உனக்கே கொடுத்து விட்டதாக நினைக்கிறாயோ! நீ மிகவும் சமர்த்தன்தான்! இன்றிரவு முழுதும் இவற்றைப் பாதுகாத்துத் திரும்பவும் சொந்தக்காரரிடத்தில் ஒப்புவித்தல் வேண்டும்.

   

ஸோமே : (இரகசியமாக) நம்மிடத்தில் இருப்பது நம்முடைய பொருள்தானே?

   

மாத : போதும் விளையாட்டு.

   

வஸ : (வணக்கமாக) எனக்கு இன்னொரு உதவி செய்தல் வேண்டும். உங்களுடைய நண்பராகிய இவரை என்னுடன் கூடத் துணையாக என் வீடுவரையில் தயவு செய்து அனுப்ப வேண்டும்.

   

மாத : அதுதானா பிரமாதம்! ஸோமேசா! கூடப் போய் விட்டு வா.

   

ஸோமே ; இதற்குத் தகுந்தவர்கள் நீங்களே! அன்னப் பேடையோடு துணை செல்வதற்குக் காக்கைக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? நான் ஏழைப் பிராமணன். எலும்புத் துண்டை நாய் கெளவுவதைப் போல என்னை இந்தக் காமாதூரர் பிடித்துப் பொடியாக்கி விடுவார்கள்.

   

மாத : சரி, நானே போகிறேன். வேலைக்காரனைக் கூப்பிட்டுப் பந்தம் தயார் செய்யச் சொல்லு.

   

ஸோமே : அடே குணசீலா!

   

குண : ஸ்வாமி!

   

ஸோமே : சீக்கிரம் பந்தம் கொளுத்து.

   

குண : எண்ணெய் இல்லாமல் பந்தம் எரியுமானால், கொளுத்தத் தடை இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.