Page 26 of 26
ஸோமே : (மாதவராயரிடத்தில் தனிமையில்) நம்முடைய வீட்டுப் பந்தம் வேசியின் குணத்தை உடையது. அது ஏழைகள் வீட்டில் பிரகாசிப்பது இல்லை. தனவந்தரைத்தான் அது மதிக்குமே யன்றி நம்மை மதிக்காது.
மாத : சரி! அப்படியானால் அதையும் நாம் மதிக்க வேண்டாம். மிகவும் பிரகாசத்தோடு ஆகாயத்தில் அதோ சந்திரன் இருக்க, நமக்கு என்ன கவலை? அவன் ஏழையையும்
தனவந்தனையும் சமமாக மதிப்பதனாலே அவனுக்கு மதி என்று பெயர் வந்திருக்கிறது. வாருங்கள் போவோம்.
(மூவரும் நடந்து வெளியில் போகிறார்கள்.)
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...