பிரமாதம் செய்கிறீர்களே! ஆனால் நானல்ல இச்செய்கையைப் பார்த்தவன் என்று சொல்ல உத்தேசித்தேன்.
நியா: அப்படியானால் அவளுடைய ஆடை ஆபரணங்களை அபகரிக்கும் பொருட்டு யாரோ அவள் தொண்டையைப் பிடித்து நெரித்துக் கொன்று விட்டதாக உமக்கு எப்படித் தெரிந்தது?
வீர : அப்படித்தான் இருக்க வேண்டும் என்று யூகித்தேன். ஏனென்றால் அவளுடைய கழுத்து வீங்கிப் போய் இருந்ததோடு ஆபரணங்களும் போயிருந்தன.
நியா: இருக்கலாம்.
வீர (தனக்குள்) உயிர் வந்தது?
நியா: சரி, வஸந்தஸேனையின் தாயை முதலில் விசாரிக்க வேண்டும். அடே சேவகா! அவளை வரவழை.
சேவ : உத்தரவு. (போய் அழைத்துக் கொண்டு வருகிறான்)
சேவ : அம்மா! இப்படியே வா! இதுதான் வழி.
தாய்க்கிழவி : (தனக்குள்) என்னுடைய குழந்தை வஸந்தஸேனை தன் நண்பர் வீட்டிற்கு நேற்றிரவு போனவள் இன்னம் வந்து சேரவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் இவன் நியாயாதிபதி அழைப்பதாகச் சொல்லுகிறான். என்ன காரணமோ, என்ன சம்பவித்ததோ தெரியவில்லை. என் மனம் பதைக்கிறது. என்ன செய்வேன்? போனால் உண்மை தெரிகிறது.
( நியாயாதிபதியை நோக்கி) ஸ்வாமி! நமஸ்காரம்.
நியா : வா! அப்படி நில்லு.
வீர : ஓகோ தாய்க் கிழவியா! வந்தாயா சரி.