வீர: என்ன பாசாங்கு செய்கிறான்! தான் செய்த குற்றத்தை மறைக்க இது நல்ல தந்திரம் சாமர்த்தியசாலிதான்
நியா : மாதவராயரே! உம்மீது பெருத்த குற்றம் சுமத்தப் பட்டிருக்கிறது. ஆகையால் யோசனை செய்யாமல் சொல்லும்.
மாத: அப்படியா! அவள் இப்பொழுதுதான் சமீப காலத்தில் சாதாரணமாகப் பரிச்சியம். அதனால் குற்றம் என்ன? ஸ்திரீ புருஷர்களுக்கே பாலியத்தில் விளையாட்டுக்கள் இருப்பது சகஜந்தானே!
நியா: ஐயா! மாதவராயரே மறை பொருளாய்ப் பேசுவதை விட்டு வெளிப்படையாகவும் உண்மையாகவும் பேச வேண்டும். நான் இங்கு சட்டப்படி கேட்கிறேன் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும். .
மாத : என் பேரில் குற்றம் சுமத்துகிறவர் யார் என்பதை முதலில் தெரிவிக்க வேண்டுகிறேன்.
வீர : இதோ! நான்தான்.
மாத : நீங்களா! அப்படியானால் விஷயம் பெரிதாக இருக்க வேண்டும்.
வீர: ஆம், தடை என்ன. இவ்வளவு கீர்த்திப் பெற்ற வஸந்தஸேனையைக் கொன்று அவளுடைய ஆபரணங்களை அபகரித்துக் கொண்டால் அது ஒருவருக்கும் தெரியாது என்று நினைத்தாயோ!
மாத : உமக்கென்ன புத்தி மாறாட்டம் கொஞ்சம் உண்டா?
நியா : சரி! போதும்; வஸந்தஸேனை இப்பொழுது எங்கு இருக்கிறாள்?
மாத : தன் வீட்டிற்குப் போயிருக்க வேண்டும்.