கிட்டப்பா இப்படி வாழ்த்துவார் என்று யாருமே எதிர் பார்க்கவில்லை. "
*உன் ஆசீர்வாதம் பலிக்கட்டும். அதுதான் எனக்கு வேண்டியது. பாகீரதி எத்தனை அழகா இருக்கா பார்த்தயா தங்கப்பதுமை மாதிரி" என்றாள் அத்தை.
"பார்க்க வேண்டியவன் பார்த்து சந்தோஷப்பட்டால் சரி" என்று கண் சிமிட்டி மூர்த்தியை ஒாக் கண்ணால் பார்த்தார்.
வெட்கத்தில் தலைகுனிந்தபடி உள்ளே ஓடிவிட்டாள் பாகீரதி.
"கிட்டப்பா ஏன் இப்படி ஜாடைமாடையாப் பேசறார்? இவாளுக்குள்ள ஏதோ பேச்சு நடந்திருக்குமோ !“ என்று சந்தேகித்தான் மூர்த்தி.
"பாகீரதியை இனிமே ‘பாகீ’ன்னு கூப்பிடாதீங்க" என்றார் கிட்டப்பா.
“வேற எப்படிக் கூப்பிடறதாம்?" "முதல் ரெண்டு எழுத்தை விட்டுட்டுப் பின் ரெண்டெழுத்தைச் சொல்லிக் கூப்பிடுங்க. அதான் பொருத்தமாயிருக்கும்" என்று ஒரு புதிர் போட்டு மகிழ்ந்தார் கிட்டப்பா.
"கிட்டப்பாவுக்குத்தான் இப்படியெல்லாம் சாதுர்யமா வேடிக்கையாப் பேசத் தெரியும். தஞ்சாவூரோன்னோ?" என்றார் கெளரியின் கணவர்.
கனபாடிகள், கமலா, கமலாவின் ஆத்துக்காரர். கிட்டா நாலு பேரும் ராத்திரியே வந்துவிட்டார்கள்.
கனபாடிகளைக் கண்டதும் “கால்ல என்ன, அண்ணா ? » என்று கவலையோடு விசாரித்தாள் கெளரி.
« வாளி தடுக்கி விழுந்துட்டேன்” என்றார் கனபாடிகள்,