ஆனால் அவள் கண்ணில் அதே ஒளி.அவன் புன்னகை மாறவில்லை.வயதின் அடையாளம் ஆங்காங்கே இருந்தாலும் பெரிய வித்தியாசம் இல்லை.என்னை அறியாமல் அவளை பார்த்து நானும் சிரித்தேன்.அருகில் வந்த அவள் என்னை பார்த்து பேசத்தொடங்கினாள்.
“எப்படி இருக்கீங்க மிஸ்டர்”அதே ஸ்வரம்
“நான் நல்லா இருக்கேன்”
“தெரியுது”என்னை ஏறிஇறங்க பார்த்துவிட்டு ஒரு சிரிப்பு உதிர்த்தாள்.வெட்கமாய் போயிற்று எனக்கு.இதுவரை கண்ணாடி சரியாக பார்க்காதது நினைத்து முதன்முறை வருந்தினேன்.
“சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.”
“நீ எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன்”
நீண்ட மௌனம்…என்ன பேச எங்கு தொடங்க புரியவில்லை எனக்கு.
“நீ இப்போ ஃப்ரீயா?ஏதாவது அவகர வேலை இருக்கா?பேசலாமா?”
“என்ன இது ..பேசலாம் தாராளமா…”
“சரி அப்போ எனக்கும் ஒரு டீ சொல்லு”
ஓடிச்சென்று ஒரு டீ வாங்கி வந்தேன்.அதற்குள் அவள் யாருடனோ பேசி முடித்து தன் அலைபேசி அணைத்தாள்.மறக்காமல் அவள் நம்பர் வாங்கனும் எண்ணிக்கொண்டே டீயை அவளிடம் நீட்டினேன்.
“நன்றி ப்ரபா”ப்ரபாகர் என் பெயர்.எத்தனை வருடம் கழித்து அவள் வாயால் அந்த பெயர்.சிலிர்த்து எனக்கு.
மீண்டும் மௌனம்.
“என்ன எதுவும் பேச மாட்டியா”
“இல்ல எங்கிருந்து ஆரம்பிக்கன்னு புரியலை”
சிரித்தாள்.
“நானே ஆரம்பிக்கறேன்.அதுதான வழக்கம்”
“உனக கு எல்லாம் ஞாபகம் இருக்கா செல்வி…மறந்திருப்பன்னு நினைச்சேன்”
“ப்ரபா…கோபமா…நான் மறக்க மாட்டேன்னு உனக கு தெரியும்.அதுவிடு…இப்போ இங்க இருந்து ஆரம்பிக்கலாம்…நீ இங்க என்ன பண்ற”
“எதுக்கு வந்தேன் தெரியலை செல்வி ஆனா இப்போ மனம் ஏனோ நிறைஞ்சிருக்கு”
“இப்ப ஒத்த வரி பதில் தான் எப்பவும்.சரி நான் இங்க எதுக்கு வந்தேன் தெரியுமா?”