(Reading time: 10 - 19 minutes)

அவளின் சந்திப்பில் நான் பெற்ற உற்சாத்தோடு பயணப்பட்டுக்கொண்டிருந்தேன்.

வீடு திரும்பியதும் மீண்டும் ஒரு சுழற்ச்சியில் வீழ்ந்தேன்.திடீரேன்று ஒரு நாள் என் மனைவி என்னிடம் வந்து

“இது எங்க கிடைச்சதுங்க புத்தகம். அற்புதமா இருக்கு.படிக்கபடிக்க சுவாரஸ்யா இருக்கு.எந்த சூழ்நிலையிலும் இதை படிக்கலாம் போல”

 அவள் காட்டிய புத்தகம் என் சிந்தனை எழுப்ப

“எங்க இருந்தது இது.எப்ப எடுத்த”பதட்டத்துடன் நான் கேட்க

“உங்க கார்ல தான் கிட்டதட்ட இரண்டு மாசம் இருக்கும்..ஏன் இப்படி பதறீங்க.வேற யாருடையதோ வா”

இது அவள் கொடுத்தது தான்.செல்வி.அவசரமாய் அதை திருப்பி திருப்பி பார்த்தேன்.இன்னும் அச்சு ஏறாத முதல் ப்ரதி.முதல் பக்கம்

“என் சுயம் தேடுதலில் வித்திட்ட என் அன்பு ப்ரபாவிற்கு இது சமர்பணம்”

என் கண்கள் கலங்கியது.எங்கோ எப்போதோ எங்க பழக்கத்தின் போது நான் சொன்னவார்த்தைகள்  அவள் எப்படி தன் நெஞ்சில் இறக்கி நிமிர்ந்துவிட்டாள்.நான் இன்று என் சுயம் தேய்ந்து செக்குமாடாய் ஓடி உண்மை சந்தோஷம் தொலைத்து அல்லல் படுகிறேன்.

மெதுவாய் அந்த புத்தகம் புரட்ட ஆரம்பித்தேன்.தடம்புரண்ட என் வாழ்க்கை சீராவதாய் உணர்ந்தேன்.ஒவ்வொரு நாளும் அழகானது.என் மகளின் பாசம் புரிந்தது.என் மனைவியின் காதல் புரிந்தது.என் உற்ற தோழமைகள் யாரென புரிந்தது.எனக்கான ஒரு நேரம் நிறைவாய் கிடைத்தது.மறுமுறை என் செல்வியை சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்க பழகினேன்.இந்த காத்திருத்தல் கூட இன்று இனிமையாய் பட்டது

அந்த புத்தகம் இன்றுவரை அச்சில் வரவில்லை. வந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.புத்தகம் பெயர்

“வாழ்வோடு வாழ்ந்து விடு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.