(Reading time: 10 - 19 minutes)

“எதுக்கு?”

“உன்னை பார்க்கத்தான்”கடகட என சிரித்தாள்

“என்ன சொல்ற செல்வி”

“நான் இந்த பக்கமா போனேன் பா…இங்க உன்னை பார்த்தேன்.நீ தானோன்னு ஒரு சந்தேகம் சரின்னு இறங்கிட்டேன்..”

“நீ இந்த ஊர்ல தான் இருக்கியா…என்ன பண்ற”

“இப்ப தான் கொஞ்சநாள் ஆச்சு ப்ரபா.உன் குடும்பம் பத்தி சொல்லு “

என் திருமணம் முதல் என் மகளின் மஞ்சள் நீராட்டு வரை ஒரு வழியாக சொல்லி முடித்தேன்.

“செல்வி…உன் குடும்பம்”

“எனக்கு இரண்டு பசங்க.அவர் சாஃப்ட்வேர். பசங்க படிப்புக்காக தான் இந்த ஊருக்கு வந்தோம்”

ஏதோ கேட்க தோன்றியது எனக்கு…பெருமூச்சாய் நிறுத்தினேன்.

“என்ன ப்ரபா…ஏதோ கேட்க வந்த…மனம் விட்டு பேசு பா…என்கிட்ட எந்த தயக்கமும் வேண்டாம்”

அவள் சொன் னது தான் தாமதம்...

“நாம் பழகின நாட்கள் எல்லாம் உனக்கு நினைவிருக்கா செல்வி.என்னை அடியோடு மறந்துட்டியா…ஏன் ஒருமுறை கூட என்னை தொடர்பு கொள்ளவில்லை”

“ப்ரபா…நாமக்குள்ள இருந்த அந்த அழகான நேசம் எப்பவும் என்னுள்ள இருக்கு.அது அழியாத அருமையான நினைவுகள்.உன்னை வெறுத்து ஒதுக்கலை ப்ரபா..விலகி நின்னேன் அவ்வளவு தான்.”

“விலகிப்போக என்ன காரணம் செல்வி.”

“ஏதேதோ காரணங்கள் ப்ரபா…உனக்கு நினைவில்லையா.அது முடிந்த கதை அது எதுக்கு இப்போ…”

“இதுவரைக்கும் ஒரு நிமிஷம் கூட நாம வாழ்க்கையில சேர்ந்திருக்க கூடாதான்னு தோனலையா உனக்கு”

“ப்ரபா எத்தனையோ முறை நினைச்சிருக்கேன்.ஏங்கி இருக்கேன்.ஆனால் அதனால எனென பலன் சொல்லு.வாழ்க்கையில் சில முடிவுகள் கடந்து போனப்பிறகு அதை பிடிச்சிகிட்டு வருத்தப்படுவது சரியில்லை.இப்போ என்ன ஆகிடுச்சு எதுவும் மாறலையே.வாழ்க்கை ஓடிகிட்டு தானே இருக்கு.”

“இயல்பா சொல்ற செல்வி”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.