“ம்ம் ஆமா செல்வி.எப்படி இப்படி பேசற நீ என்ன தெளிவு.மனம் முழுக்க ஏதோ குழப்பம்.இப்போ தெளிஞ்சிருக்கு”
“முழுசா தெளிஞ்சா சரி….ஆமா ப்ரபா நீ நிறைய புத்தகம் வாசிப்பியே இப்பவும் அந்த பழக்கம் இருக்கா”
“இல்ல செல்வி.இப்ப எல்லாம் டிவி செல்போன் தான் பொழுதுபோக்கு.”
“முன்னம் எல்லாம் நீ தான் எனக்கு நிறைய படிக்க புத்தகம் கொடுப்ப நினைவிருக்கா..அதுல ஒரு புத்தகம் தான் உன் தூது புறா அது நினைவிருக்கா”
“நல்லா.அப்ப்பா அந்த லெட்டர் நீ படிச்சயா இல்லையான்னு நான் பட்ட வேதனை..அய்யய்யோ”
“அது அன்னைக்கே படிச்சிட்டேன்.ஏன் நேரில் சொல்ல மாட்டாரோன்னு ஒரு கோபம் தான்”
“அது சரி பசங்கல ஏங்க விடறது தானே பொண்ணுங்க வழக்கம்..உனக்கு சம்மதம்ன்னு நீயும் பதில் அனுப்பிருக்கலாம் இல்ல…ஒரு வருஷம் காக்க வச்சிட்ட”
“நேர்ல அன்னைக்கு சொல்லிருந்தா பதிலும் உடனே கடைச்சிருக்கும் இல்ல.நீ தான் அநாவசியமா நாள் கடத்திட்ட”
பழைய நினைவுகளில் சற்று திளைத்து வந்தோம்.நாங்கள் போட்ட சண்டைகள் கொஞ்சிய நாட்கள்..மீண்டும் ஒரு முறை காதல் நாட்களில் வாழ்ந்து வந்தோம்.மனம் இறகாக ஆயிற்று.
“செல்வி வாழ்க்கை அழகா தெரியுது”
“ஆமா ப்ரபா .வாழ்க்கை அழகு தான்.நமக்குள்ள எத்தனை நினைவுகள் பார்த்தியா.நீ சொன்னது போல என் தொடர்பு உனக்கிருந்திருந்தா இந்த நாள் இல்லாம போயிருக்கும்.இந்த சந்தோஷம் கிடைக்காம போயிருக்கும்”
“இல்ல செல்வி இது தினமும் கிடைத்திருக்கும்”
அவள் சிரித்துக்கொண்டாள்.அவள் அலைபேசி அழைத்தது.
“ப்ரபா நேரம் போனதே தெரியலை.நான் கிளம்பனும்.”
“அதுக்குள்ள என்ன.சரி உன் நம்பர் கொடு.அப்புறம் பேசலாம்”
என்ன நினைத்தாளோ சற்று பலமாகவே சிரித்துக்கொண்டாள்.தன் பையிலிருந்து ஒரு பழுப்பு கவர் எடுத்து கொடுத்தாள்.
“ப்ரபா..இது உனக்கு.என் சுய விலாசம் இது.மறுபடி இப்படி சந்திக்கனும்னு ஆசை தான்.பார்க்கலாம்.நான் வரேன் ப்ரபா”
கைக்குலுக்கலுடன் முடிவுபெற்றது அந்த சந்திப்பு.மணிப்பார்க்க அலைபேசி எடுத்ததில் சுற்றிக்கொண்டது பலநூறு வளைகள்.